"மணி SIR மேல இருக்குற லவ், கேர்.. சுஹாசினி காத பொத்திக்கங்க".. குஷ்புவின் செல்ல சண்டை.. PS2 AUDIO & TRAILER LAUNCH

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.  இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. 

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர். சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் அஷ்வினும், நம்பி கதாபாத்திரத்தில் ஜெயராமும் நடிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாண்டிய ஆபத்துதவிகளை தூண்டிவிட்டு, ஆதித்த கரிகாலன் மீதான தன் பழைய வஞ்சத்தை தீர்த்துகொள்ள நந்தினி செய்யும் சூழ்ச்சியும் அதனால் சோழ அரியணைக்கு வரும் ஆபத்தும், இதை எதிர்கொள்ள, தான் விரும்பும் வந்தியத்தேவன் மூலம் இலங்கையில் உள்ள தன் சகோதரனும் பொன்னியின் செல்வனுமான அருள்மொழிவர்மனுக்கு செய்தி அனுப்புகிறார் சோழ இளவரசி குந்தவை. நந்தினியின் சூழ்ச்சி எப்படி சோழர்களால் முறியடிக்கப்படுகிறது? நந்தினி திருந்தினாரா? ஆதித்த கரிகாலன் என்ன ஆகிறார்? ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்குமான பிரச்சனைக்கு பின்னணி தெளிவானதா? என்பதை நோக்கி இப்படத்தின் 2-ஆம் பாக கதை பயணிக்கிறது.

இந்நிலையில், நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் கமல்ஹாசன், ரேவதி, குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

முன்னதாக இதில் பங்கேற்று பேசிய நடிகை குஷ்பு, “மணி சார் மேல இருக்கும் லவ் பத்தி சொல்லணும்னா சுஹாசினி காதை பொத்திக்கொள்ள வேண்டும். அலைபாயுதே படத்தில் எனக்கு தரப்பட்ட கதாபாத்திரம் ரேவதி, ஷோபனா, ஐஸ்வ்ர்யா ராய், த்ரிஷாவுக்கு கொடுக்கப்பட்ட மாதிரி முழுமையான கதாபாத்திரம் அல்ல. அதுக்காக மணி சாருடன் எப்போதும் சண்டை போட்டுட்டே இருப்பேன், அவர் மீதான எனது இந்த புகாரை சொல்ல இந்த மேடை ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது” என ஜாலியாகவும் க்யூட்டாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"மணி SIR மேல இருக்குற லவ், கேர்.. சுஹாசினி காத பொத்திக்கங்க".. குஷ்புவின் செல்ல சண்டை.. PS2 AUDIO & TRAILER LAUNCH வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kushboo speech about mani ratnam Ponniyin Selvan 2 Audio Launch

People looking for online information on Kushboo Sundar, Kushbu, Ponniyin Selvan 2, Ponniyin Selvan Audio Launch, PS 2 will find this news story useful.