PREGNENT ஆனப்புறம் தான் REGISTER MARRIAGE நடந்தது.. KPY நவீன் & அவரது மனைவி EMOTIONAL பேட்டி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பல முன்னணி கலைஞர்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நகைச்சுவை நிகழ்ச்சிகளான சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட விஜய் டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பல முன்னணி கலைஞர்கள் உருவாகி இருக்கின்றனர்.

Advertising
>
Advertising

சின்னத்திரையிலும் சரி வெள்ளி திரையிலும் சரி இந்த கலைஞர்கள் பிரபலமாகியுள்ளனர்.‌ சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சிவாங்கி திரைப்படத்தில் தற்போது நடித்திருக்கிறார். விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் மாகாபா சில திரைப்படங்களின் நடிக்கிறார். முன்னதாக லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் நடிகர் சந்தானம் திரையுலகத்திற்கு வந்தார். பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மூலம் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், அமுதவாணன், ராமர், அறந்தாங்கி நிஷா,  வெட்டுக்கிளி பாலா மற்றும் பலர் தற்போது திரையுலகத்தில் பிஸியாக நடித்து வருகின்றனர்.‌

அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நவீன் தம்முடைய நகைச்சுவை மற்றும் மிமிக்ரி திறமையால் திரையுலகில் சிறந்த பின்னணி குரல் கலைஞராக வலம் வருகிறார். அண்மைக் காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் தொடரில் நாயகனாக நடித்த நவீன், பல்வேறு நடிகர்களின் குரலை அப்படியே தத்ரூபமாக பேசக்கூடிய வல்லமை வாய்ந்தவர்.  இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு குழந்தைக்கு அப்பாவானார்.

இந்த நிலையில், தங்களின் குழந்தை பிறப்பு மற்றும் மனைவியுடனான காதல் என பல்வேறு விஷயங்களை இவரும் இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரியும் இணைந்து பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேக பேட்டியாக அளித்திருக்கின்றனர்.

இது பற்றி பேசிய நவீனின் மனைவி கிருஷ்ணகுமாரி, “நான் கர்ப்பம் தரித்த பிறகு தான் எங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்தது. முன்னதாக எங்களுடைய திருமணம் வீட்டில் எளிமையாக நடந்தது. அப்போது நாங்கள் சரியாக பேசிக் கொள்ளவில்லை. என்ன இப்படி திருமணம் நடக்கிறது என்று சோகமாக தான் இருந்தோம். இருப்பினும் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிந்தது.

அதன் பிறகு கர்ப்பம் தரித்த நான், பாவம் கணேசன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சூட்டிங் முடியும் வரை அமர்ந்திருப்பேன். அப்போது இடையிடையே வந்து ஏதாவது தேவையா? சாப்டியா? என்று கேட்டுக் கொண்டே இருப்பார். அவ்வளவு அன்பாக பார்த்துக் கொள்வார்” என்று உருக்கமாக பேசி இருக்கிறார்.

முன்னதாக சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் மாதவன் வாய்ஸ் பேச சொல்லி நவீனை ஒரு ரசிகையாக கிருஷ்ணகுமாரி கோரிக்கை விடுக்க, அப்போது மாதவன் குரலில் அலைபாயுதே வசனத்தை கிருஷ்ணகுமாரி பெயரை வைத்து பேசி காண்பித்திருக்கிறார் நவீன். அப்போது நவீன் மனதில் எதுவும் இல்லை என்றாலும் கிருஷ்ணகுமாரி நவீனின் இந்த அன்புக்கு பாத்திரமாகி இருக்கிறார். இப்படித்தான் இவர்களின் காதல் கதை தொடங்கியது என்பதையும் நவீன் பகிர்ந்திருந்தார்.

KPY Naveen wife Krishnakumari emotional about her husband

People looking for online information on Kpy naveen, KPY Naveen Family Photos, KPY Naveen Interview, KPY Naveen Wife will find this news story useful.