‘ஆத்தங்கர மரமே’ பாட்டுல வர்ற கிராமத்து பொண்ணா இவங்க.? மாடர்ன் ட்ரெஸ்ல கலக்குறாங்களே.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ருத்ரா என்கிற அஸ்வினி 80-கள் மற்றும் தொண்ணூறுகளின் நினைவுகளில் இருந்து மறக்கப்பட முடியாதவர், அகற்றப்பட முடியாதவர்.

Advertising
>
Advertising

அந்த சமயத்தில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரும் மத்தியில் பிரபலமானார் ருத்ரா. அஸ்வினி என்று அழைக்கப்படும் இவர் தன்னுடைய பெயரை அஸ்வினி என்றேஎ குறிப்பிடுகிறார். நடிப்பு, நடனம் என்று பன்முகம் கொண்ட அஸ்வினி அந்த சமயத்தில் பாரதிராஜா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த கிழக்குச்சீமையிலே திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் இன்னும் பட்டிதொட்டியெங்கும் ரீச் ஆனது.

திரைப்படத்தில் பார்க்க வாய்ப்பு இல்லாதவர்கள் கூட கண்டிப்பாக அவ்வப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆத்தங்கர மரமே பாடலில் அஸ்வினியை பார்த்திருக்க கூடும். தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் இந்த பாடல் மூலமாக அஸ்வினி தனக்கான தனி இடத்தை பிடித்தார்.

இப்படி, கிராமத்து பெண்ணாக கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் தோன்றி நடித்த அஸ்வினி, தமிழ் திரை உலகில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தான் மிகவும் பிரபலமானார் என்றால், மலையாளத்தில் அதைவிடவும் பிரபலமாகி இருக்கிறார். மலையாளத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலருடனும் ருத்ரா என்கிற பெயரில் அஸ்வினி இணைந்து நடித்திருக்கிறார்.

இவர் இப்போது எங்கே இருக்கிறார்..? என்ன செய்து கொண்டிருக்கிறார்..? இப்போது எப்படி இருக்கிறார்..? என்று பலரும் அறியாமல் இருக்கக்கூடும். இந்நிலையில்தான் சிங்கப்பூரில் இருந்து நடிகை அஸ்வினியின் சமீபத்தில் புகைப்படங்கள் இணையதளங்கள் மூலமாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிழக்குச் சீமையிலே படத்தில் பார்த்த நடிகையா இது? இப்போது மாடர்ன் உடையில் இப்படி ஒளிர்கிறாரே? என்று பேசி வருகின்றனர்.

Kizhakku cheemayile aathangara marame actress new viral pics

People looking for online information on Kizhakku cheemayile aathangara marame actress new viral pics will find this news story useful.