KHUSHBOO : "மனசுல இருக்குற பார்வைதான் எல்லாமே".. வெற்றிமாறன் கருத்து குறித்து குஷ்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனரின் வெற்றிமாறனின் கருத்து குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பேரரசு கருத்து தெரிவித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் அடையாளங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்றன என்றும் அவற்றினை திராவிட சித்தாந்தம் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அப்போது பேசிய இயக்குநர் வெற்றிமாறன், இதன் தொடர்ச்சியாக திருவள்ளுவருக்கு காவி அணிவிக்கப்படுவதாகவும், ராஜராஜ சோழன் இந்து அரசனாக மாற்றம் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டு, இப்படியான பல வழி நிலைகளிலும் தமிழ் அடையாளங்கள் எடுக்கப்படுகின்றன என்று கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து தற்போது இயக்குனர் பேரரசு தெரிவித்திருக்கும் கருத்து பரவலாகி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய நடிகை குஷ்பு, “மனசுல இருக்குற பார்வைதான் எல்லாமே. உலகம் உருண்டை என்று சிலருக்கு தோன்றும், சிலருக்கு சதுரமாக தோன்றும், வெற்றிமாறன் கருத்து குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. உங்களுடைய பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள். துப்பு கண்டுபிடிக்கணும், தவறு கண்டுபிடிக்கணும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். வெற்றிமாறன் அப்படி கூறுகிறார், அப்படி புரிந்துகொண்டுள்ளார் என்றால், அது அவருடைய துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன், அவரது பார்வையில் ஏதோ பிழை இருப்பதாகவே தோன்றுகிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Khushboo Over Vetrimaaran speech on Raja Raja Cholan

People looking for online information on Khushboo, Perarasu, Ponniyin Selvan, Ponniyin Selvan part 1, PS1, Vetrimaaran, Vetrimaaran Raja Raja Cholan will find this news story useful.