அடிபொலி..!. சேட்டன்களுக்கு நடுவில் நின்னு செண்டை மேளம் வாசிச்ச கேரள இளம் பெண்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்றைய இளம் பெண்களின் துணிச்சலும், சுட்டித்தனமும் பார்ப்பதற்கே ஆரோக்கியமாக இருப்பதை காண முடிகிறது. இதற்கு இன்னொரு உதாரணமாக, கேரள இளம் பெண் செய்துள்ள வைரல் காரியம் ஒன்று இணையத்தில் சக்கை போடு போட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ‘விக்ரம்’ பார்த்த ‘அவ்வை சண்முகி’ மேக்கப் மேன் மகள்.. இவங்க ஹாலிவுட் நடிகையா.?

பொதுவாகவே தமிழகத்தில் விசேஷங்களில் காணப்படும் செண்டை மேள வாத்தியக்காரர்களை பலரும் ஆச்சரியத்துடன் பார்ப்பது உண்டு. காரணம், வழக்கமான தவிள் மாதிரி இல்லாமல், தவிளையே செங்குத்தாக சுமந்த மாதிரியான ஒரு அமைப்பில் இந்த செண்டை மேளத்தை எப்படித்தான் மாட்டிக்கொண்டு வாசிக்கிறார்கள் என்பதுதான்.

அதிலும் அத்தனை வெயிட்டான அந்த செண்டி மேளத்தை கழுத்தில் குறுக்காக மாட்டிக்கொண்டு கடைசிவரைக்கும் எனர்ஜி குறையாமல் வாசிக்கும் சேட்டன்களை  நின்று வேடிக்கை பார்க்காதோரே இருக்க முடியாது. கேரளாவில் பிரபலமான இந்த செண்டை மேளத்தை அங்கும் நிகழ்ச்சிகளில் அதிகம் காணமுடியும். அப்படி ஒரு விசேஷ வீட்டில் செண்டை மேளத்தை ஒரு வாத்தியக்குழுவினர் அடித்துக்கொண்டிருக்க, அதை பார்த்துக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், மற்றவர்கள் போல், அதை பார்த்து ரசித்து கத்தி ஆரவாரம் செய்துவிட்டு சென்றுவிடவில்லை.

மாறாக, செண்டை மேளத்தை அந்த வாத்தியக்காரர்களிடம் இருந்து வாங்கி, அத்தனை வெயிட்டான அந்த கருவியை கழுத்தில் செங்குத்தாக மாட்டிக்கொண்டு, அந்த ஆண்களுக்கு நடுவில் நின்று, முழு எனர்ஜியுடன் ஆடிக்கொண்டு அடித்து அசத்தியுள்ளார் அந்த இளம் பெண். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த பலரும், இப்படியான துணிச்சலும் சுதந்திரமும் தான் இன்றைய பெண்களுக்கு தேவை என்று பாராட்டி வருகின்றனர்.

Also Read | அடடே.. Nazriya-வின் அனல் தெறிக்கும் DANCE.. ‘அடடே சுந்தரா’ பட விழா.! Video

தொடர்புடைய இணைப்புகள்

Kerala young girl playing chenda melam becomes viral

People looking for online information on Kerala, Music, Viral, Young girl playing chenda melam will find this news story useful.