சமந்தா பற்றிய ரசிகரின் கேள்வி.. தெறியான பதில் அளித்த கீர்த்தி சுரேஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Advertising
>
Advertising

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.  

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.5 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி, தசரா படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் ரசிகர்களை கடந்ததை தொடர்ந்து ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ஒரு ரசிகர், "நடிகை சமந்தா குறித்து சொல்லுங்கள்" என்ற கேள்விக்கு கீர்த்தி சுரேஷ், சமந்தா, நான் வியந்து பார்க்கும் ஒரு ஆளுமை. நான் சந்தித்த மிகவும் வலுவான இதயம் கொண்ட நபர்களில் இவரும் ஒருவர். எளிமையாகச் சொன்னால், அவள் (சமந்தா) தடுக்க முடியாதவள்!" என கீர்த்தி சுரேஷ் பதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Answer about Samantha Viral Post

People looking for online information on Keerthy Suresh, Samantha will find this news story useful.