“மனுஷ்யரெல்லாம் ஒன்னு போலே” - கீர்த்தி சுரேஷ் அழகாய் பாடுன ஓணம் SONG .. ஹார்ட்டின் விடும் FANS.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மையில் மகேஷ் பாபுவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த சர்க்காரு வாரி பாட்டா படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் 'மாமன்னன்' திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

Advertising
>
Advertising

ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த தயாரிக்கும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்ற செய்தியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் கடந்த மார்ச்-4 ல் துவங்கி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. மாமன்னன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சேலத்தில் கடந்த மே மாதம் முதல் வாரம் துவங்கியது. மே மாதம் 8 ஆம் தேதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று ஓணம் திருநாளை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் படக்குழுவுக்கு பூக்கோலம் போட்டு கேரள ஸ்டைலில் சத்யா விருந்து வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

இதனிடையே காரில் வரும்போது நடிகை கீர்த்தி சுரேஷ், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்தி  “மாவேலி நாடும் வானிடும் காலம்..  மனுஷ்யரெல்லாம் ஒன்னு போலே” என்கிற ஸ்பெஷல் ஓணம் பாடலை பாடியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வீடியோவின் கீழ் ஹாட்டின் கொடுத்து ஓணம் வாழ்த்து சொல்லி கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர், 

 

தொடர்புடைய இணைப்புகள்

Keerthi Suresh Sining Onam Soong viral video ஓணம்

People looking for online information on Keerthi Suresh, Keerthi Suresh Sining Onam Soong viral video will find this news story useful.