அந்த நிகழ்ச்சியில் ஜெயிச்சது 5 கோடி.. ஆனா, அதுக்கு அப்புறம்..?!! - வெற்றி பெற்றவரின் வைரல் பதிவு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொடீஸ்வரன் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் இணையத்தில் எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார். 

ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி கோன் பனேகா க்ரோர்பதி. இந்நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. தமிழில் நடிகர்கள் சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள். 

இந்நிலையில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் 5 கோடி வெற்றி பெற்ற சுஷில் குமார் என்பவர் தனது ஃபேஸ்புக்ப் பக்கத்தில் எமோஷனல் பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''எனது வாழ்வில் ஏற்பட்ட புதிய மாற்றங்களை என்னால், கையாள முடியவில்லை. ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கணவை விட்டுவிட்டேன். இதையடுத்து சில தொழில்களில் முதலீடு செய்து, அதிலும் நஷ்டம் அடைந்தேன். பலர் என்னிடம் பணத்தையும் ஏமாற்றினார்கள். மேலும் நான் குடி பழக்கத்திற்கு அடிமையாகி, சினிமா மோகத்திலும் சுற்றி கொண்டிருந்தேன். 

இப்போது நான் எனது ஊருக்கே சென்று விட்டேன். வாழ்க்கை இப்போது கொஞ்சம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் எப்போதும் சின்ன சின்ன இலக்குகளை வைத்து கொள்ள வேண்டும் என புரிந்து கொண்டேன், என அவர் பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

கோடீஸ்வரன் வெற்றியாளர் பதிவு | KBC winner sushil kumar emotional post after winning 5 crores

People looking for online information on Amitabh Bachchan, KBC winner will find this news story useful.