ABI NAVYA: கர்ப்பமாக இருக்கும் கயல் சீரியல் நடிகை.. கணவருடன் எடுத்த வைரல் ஃபோட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் கயல் மெகா தொடரில் நடித்து வருபவர் அபி நவ்யா.

Advertising
>
Advertising

பிரபல செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் அபி நவ்யா. அபிநவ்யா சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி ஆகிய சில தொடர்களில் நடித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிப்பரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும், கண்மணி தொடரில் சினேகாவாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கும் சீரியல் நடிகர் தீபக் குமாருக்கும் கடந்த ஆண்டு மாங்காடு கோயிலில் திருமணம் நடைப்பெற்றது.

நடிகர் தீபக், டிக்டொக் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். பின்னர் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நவீன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். என்றென்றும் புன்னகை, ஈரமான ரோஜாவே -2 சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு அடையாளத்தை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் அபி நவ்யா - தீபக்குமார் தம்பதியர் தற்போது புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களில் நடிகை அபி நவ்யா கர்ப்பமாக இருப்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் குழந்தை பிறப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Kayal Serial Actress Abi Navya Pregnancy Photoshoot vial Pics

People looking for online information on Abi Navya, Kayal Serial, Sun TV will find this news story useful.