மௌனம் பேசியதே பட பாடலாசிரியர் காமகோடியன் இயற்கை எய்தினார்! திரையுலகுக்கு பேரிழப்பு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: மாநில அரசு விருது வென்ற கவிஞர் காமகோடியன் இயற்கை எய்தினார்.

Advertising
>
Advertising

தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான காமகோடியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதியுள்ளார். மேலும் பரத்வாஜ், தேவா, S A ராஜ்குமார் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக கடந்த 2002  ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா - த்ரிஷா நடித்த மெளனம் பேசியதே படத்தில், இவர் எழுதிய ‘என் அன்பே என் அன்பே’ பாடல் நல்ல ஹிட்டானது. 2019 ஆம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இவர் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திருட்டு ரயில் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதினார். இந்நிலையில் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக பாடலாசிரியர் காமகோடியன் நேற்று புதன் இரவு (8.15 PM) காலமானார். இவருக்கு வயது 76.

இவரது இறுதிச்சடங்கு இன்று (06.01.2022) சென்னையில் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. கவிஞரின் இல்ல முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Address: சஞ்சய் - 9840078080 (அலைபேசி)

KINGS CROSS அப்பார்ட்மெண்ட்
எண் - 81/102 Chamiers Road , R.A. புரம் , Diagonal Opposite Crown Plaza (Park Sheraton )
Chennai - 600028. (behind Levi's show room )

https://maps.app.goo.gl/GWJwL4VE16L1eAK1A

 

'விக்ரம்' நடிக்கும் கோப்ரா படத்தின் வைரலாகும் BTS Image! மஜாவான ஷூட்டிங் அப்டேட்!

தேள் கடிக்கு ஆளான பிரபல தெலுங்கு நடிகை... படப்பிடிப்பில் நடந்த சம்பவம்..!

 

Kavingar Kamakodeyen Passed away yesterday

People looking for online information on காமகோடியன், மௌனம் பேசியதே, Kavingar Kamakodeyen, Mounam Pesiyathe, Two State Award Winner will find this news story useful.