பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு உண்மையில் வெளியேறினாரா கவின் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய நிகழ்ச்சியில் (செப்டம்பர் 26) பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான ஜனனியும், ரித்விகாவும் உள்ளே வந்தனர் பின்னர் அவர்கள் பிக்பாஸ் போட்டியாளர்களின் நிறைகளை சுட்டிக்காட்டி பேசினர்.

அதனைத் தொடர்ந்து ஜனனி தனது படமான 'வேழம்' படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட்டார். பின்னர் ரித்விகாவும் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அவர் நடித்த 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

அவர்கள் சென்றதும் 5 லட்சம் என்று எழுதியிருந்த பெட்டி போட்டியாளர்களின் முன்பு வைக்கப்பட்டது. அப்போது பேசிய பிக்பாஸ், இந்த வார எவிக்ஷனில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம். மேலும் இறுதியில் ஒருவர் மட்டுமே டைட்டிலை ஜெய்த்து  என்று கூறி, அதனால் இப்பொழுதே இந்த 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் வெளியேறலாம்'' என்று குறிபப்பிட்டார். 

அதனைத் தொடர்ந்து கவின் தான் வெளியேறுவதாக அறிவித்தார். பின்னர் இன்று ஒளிபரப்பான புரோமோவில், சாண்டி கவினை சமாதானப்படுத்த,  அதற்கு அவர் வெளியேறும் முடிவில் உறுதியாக இறுக்கிறார்.இந்நிலையில் கவின் பிக்பாஸ் அறிவித்த ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Kavin might be evicted in Losliya, Sandy, Kamal's Bigg Boss 3

People looking for online information on Bigg Boss 3, Kavin, Losliya, Sandy, Tharshan will find this news story useful.