'சேரப்பா OUT, லாஸ்லியா-கவினின் அடுத்த TARGET இவர் தான்' - BIGG BOSS பிரபலத்தின் கணவர் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து சேரன் வெளியேறியது குறித்து முன்னாள் பிக் பாஸ் பிரபலம் சுஜா வருணியின் கணவர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 91 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை எந்த பாகுமாடுமின்றி உறவுகளாக, காதல், நட்பு என பழகி வந்த போட்டியாளர்களிடையே போட்டியின் தீவிரம் அதிகமானதால் கருத்து வேறுபாடுகள், மோதல்கள் ஏற்பட்டன.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே “ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக..” என ஒன்றாகவே ஜோடி போட்டு போட்டியாளர்களை கலாய்த்து பங்கம் பண்ணிய கவின் மற்றும் சாண்டி இடையே சற்று விரிசல் ஏற்பட்டது பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், சில போட்டியாளர்கள் ஸ்ட்ரேட்டஜி கேம் விளையாடி வருவதாக பேச்சுகள் அடிப்பட்டன.

அதன் விளைவாகவோ என்னவோ பிக் பாஸ் போட்டியில் தொடர மக்களின் வாக்குகள் போதாத காரணத்தால்து சேரன் நேற்று வெளியேற்றப்பட்டார். இது குறித்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த ட்வீட்டில், “சேரன் ஒரு சிறந்த போட்டியாளர். குட் டைம்ஸ்க்கு நன்றி. ஆனால், அவருடைய நேரத்தையும், சக்தியையும் லாஸ்லியாவுக்காக வீணடித்துவிட்டார். அவரே சொல்கிறார் நான் அழவில்லை என்று, கண்ணில் ஒரு சொட்டு கண்ணீரை கூட காணோம். வைரமா மின்னுற கவினுக்கும் செம்ம கலாய். அடுத்ததாக இருவரும் தர்ஷனை டார்கெட் செய்வார்கள்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kavin Losliya target Tharshan Bigg boss Tamil 3 Shivakumar

People looking for online information on Bigg Boss Tamil 3, Cheran, Kavin, Losliya, Tharshan will find this news story useful.