'கேப்டனுக்கான போட்டியில் எழும் பிரச்சனை' - சீக்ரெட் ரூமில் இருந்து வேடிக்கை பார்க்கும் சேரன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டார். இதனையடுத்து சேரன் எவிக்ட் ஆகிறார் என்று நினைத்த வனிதா, 'இது சரியில்லை. எதை வைத்து முடிவு செய்கிறார்கள்' என்று கடுமையாக எதிர்த்தார்.

இந்நிலையில் இன்றைய தினம்(செப்டம்பர் 9) வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டின் தலைவருக்கான போட்டி நடைபெறுகிறது. அதில் வனிதா, லாஸ்லியா, தர்ஷன் பங்கு பெறுகிறார்கள்.

கலர் திரவங்கள் நிரப்பப்பட்ட பவுலை போட்டியாளர்கள் இரண்டு கையிலும் ஏந்தி நிற்கிறார்கள். அதில் அந்த பவுல் அனைத்திலும் அளவுகோல் உள்ளது. அப்போது தீடிரென வனிதா, ''இல்லப்பா என்னால முடியாது. நான் வீட்டுக்குடுத்துடுறேன்'' என்று பின்வாங்குகிறார்.

பின்னர் தர்ஷனும் 'கால் வலிக்குது' என்று பின் வாங்குகிறார். கவின் அதனை கண்டிக்கிறார். அதனைத் தொடர்ந்து லாஸ்லியா தர்ஷனிடம், ''சத்தியமா எனக்கு இது வேணாம். ஏன் இப்படி பன்ற தர்ஷன்'' என்று கோபமாகிறார்.

'கேப்டனுக்கான போட்டியில் எழும் பிரச்சனை' - சீக்ரெட் ரூமில் இருந்து வேடிக்கை பார்க்கும் சேரன் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kavin, Losliya, Cheran, Vanitha's Bigg Boss 3 Promo 1 Bigg Boss 3 Sept 9

People looking for online information on Bigg Boss 3, Cheran, Kavin, Losliya, Vanitha will find this news story useful.