"ஆத்திசூடி பாடுங்க".. BIGGBOSS சொன்னதும் கதிரவன் செஞ்ச விஷயம்.. சிரிச்ச ஹவுஸ்மேட்ஸ்.. VIJAY ANTONY போட்ட COMMENT!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், தற்போது மிக முக்கியமான ஒரு கட்டத்தையும் இந்த நிகழ்ச்சி எட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

சுமார் 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், இனி உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடி நிறைந்ததாக தான் இருக்கும். அடுத்தடுத்து டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலும் உள்ளது.

மேலும், பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு ஆதரவினை அளித்து வருவதுடன் அவர்கள் பற்றிய கருத்தையும் தெரிவித்து வருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த விஷயம், தினந்தோறும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அதே போல, ஒவ்வொரு வாரமும் நடைபெறும் டாஸ்க் காரணமாக பிக்பாஸ் வீட்டில் ஏராளமான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் கூட போட்டியாளர்கள் இடையே நடைபெற்று வருவதும் பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெறும். இப்படி ஏகப்பட்ட பரபரப்பான சம்பவங்கள் நிறைந்து பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதால், விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

முன்னதாக, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறி இருந்தார். இதற்கடுத்து மற்ற போட்டியாளர்கள் புதிய டாஸ்க்கில் தங்களின் திறனை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக மைனா நந்தினி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விக்ரமன், ரச்சிதா, அசீம், ஜனனி, மணிகண்டா மற்றும் ADK உள்ளிட்டோர் இந்த வார எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வார டாஸ்க்காக பிக்பாஸ் வீட்டில் சொர்க்கமா, நரகமா என்ற தலைப்பில் போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதற்கு மத்தியில், Luxury பட்ஜெட் டாஸ்க்காக, வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தையின் அறிவுத் திறனை மேட்ச் செய்வது போல ஆட வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

இதில் பல போட்டியாளர்களிடம், குழந்தைகளிடம் கேட்கப்படுவது போல ஏராளமான கேள்விகள் கேட்கப்பட, ஒவ்வொருவரும் பதிலளித்து ஸ்கோர் செய்கின்றனர். இந்த நிலையில், கதிரவனிடம் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் சொன்ன பதிலும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஆத்திசூடியின் முதல் 5 வரிகள் சொல்லுமாறு கதிரவனிடம் பிக்பாஸ் கூற, இதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி இசையமைத்த ஆத்திசூடி பாடலை பாட தொடங்கினார். இதைக் கேட்டதும் பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் சிரிக்க, ஔவையார் எழுதிய ஆத்திச்சூடி என்பதையும் பிக் பாஸ் நினைவூட்டுகிறார்.


இந்த சம்பவம், பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற நிலையில், இசை அமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனியும் "😊" என ஒரு ஸ்மைலியை மட்டும் வீடியோவின் கீழ் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kathiravan sing aathichudi song in biggboss vijay antony responds

People looking for online information on Bigg boss 6 tamil, Kathiravan, Vijay Antony will find this news story useful.