பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்த போட்டியாளர்?.. ஆச்சர்யத்தில் சக போட்டியாளர்கள்! BIGGBOSS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "அப்போவே தெரிஞ்சிடுச்சு".. தன்னுடைய எலிமினேஷன் பற்றி மனம் திறந்த தனலட்சுமி..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் மிக உற்சாகமாக வரவேற்றிருந்தனர். அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரை கட்டியணைத்து கண்கலங்கியது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் பண மூட்டை ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. அதில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஃபைனலிஸ்ட் 6 பேரில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் எனவும் நேரம் ஆக, பணமூட்டையில் இருக்கும் பணமும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் கார்டன் பகுதியில் தொங்கிய பண மூட்டையை கதிர் அறுக்க முயற்சிக்க, போட்டியாளர்கள் அனைவரும் வேண்டாம் என பதறியபடி அருகில் செல்கின்றனர்.

ஆனாலும் கதிர் பண மூட்டையை கட் செய்யவே அனைவரும் இன்னும் காத்திருந்திருக்கலாம் என கதிரிடம் கூறுகின்றனர். இருப்பினும் பணத்திற்காக தான் இந்த முடிவை எடுக்கவில்லை எனவும் கதிர் கூறுகிறார். அமுதவாணன், GP முத்து, ரச்சிதா ஆகியோர் கதிரிடம் இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாமே என கவலையுடன் கேட்கின்றனர். இது ஏதும் விளையாட்டா? என போட்டியாளர்கள் பேச, அப்படி இல்லை நிஜமாகவே கதிர் பண மூட்டையுடன் வெளியேற முடிவெடுத்துவிட்டதாக கூறுகிறார் அசீம். இதனையடுத்து, கதிரின் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும் என்கிறார் அசீம். பண மூட்டையை கதிர் அறுத்து தான் வெளியேற இருப்பதாக அறிவித்திருப்பதால்  பிக்பாஸ் வீடே அதிர்ந்து போயுள்ளது.

Also Read | ஷிவின் மாதிரி ஆக்டிங் செஞ்ச அமுது.. விக்ரமனால சிரிப்பை கண்ட்ரோல் பண்ணவே முடியல😂

தொடர்புடைய இணைப்புகள்

Kathir opted to take the cash sack and exit the BB show

People looking for online information on Bigg boss, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Kathir, Kathir take the cash sack, Kathiravan will find this news story useful.