2வது மனைவினு நெனைச்சு முதல் மனைவிய கட்டிப்பிடிச்சு சிக்கிய ‘சுந்தரி’ கார்த்திக்.. மரண பங்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Sun TV Sundari Serial: சன் டிவி-யில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் சுந்தரி.

Advertising
>
Advertising

கார்த்திக்கின் இரட்டை வேடம்

நடிகை கேப்ரியலா கதாநாயகியாக நடித்து வரும் இந்த சீரியல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சுந்தரியின் கணவரான கார்த்திக், ஏற்கனவே சுந்தரிக்கு தெரியாமல், அனுவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். தன் மனைவிதான் சுந்தரி என்பதை அனுவுக்கும் தெரியாமல் மெயிண்டெய்ன் செய்து வருகிறார்.

ஆனால் அதிரடி ட்விஸ்ட்டாக, கணவர் கார்த்திக் மற்றும் அனு நிர்வகிக்கும் கம்பெனியிலேயே சுந்தரி வேலைக்கு சேர்ந்துவிட்டார். சைடில் கலெக்டருக்கும் சுந்தரி படித்து வருவதால் அவரை அனு உட்பட அனைவருமே கலெக்டர் அம்மா என சொல்லி அழைத்து வருகின்றனர்.  

சுந்தரிக்கு தெரியவந்த உண்மை

இந்த வேலை நிமித்தமாக சுந்தரி சென்னையில் ஒரு தனி வீடு எடுத்து வசித்து வருகிறார். அந்த வீட்டில் இருந்து அண்மையில் தான் சுந்தரி கார்த்திக்கை வெளியேற்றினார். அதற்கு காரணம் கார்த்திக் சுந்தரிக்கு டிமிக்கு கொடுத்து வந்ததுடன், அனுவுடன் வாழ்கிறார் என்கிற உண்மை சுந்தரிக்கு தெரியவந்ததுதான்.

Also Read: அதென்னயா குறும்படம்?..  சோதிக்காதீங்கடா!.. #BiggBossUltimate-க்கு வரும் பிரபல போட்டியாளர்!

ஆம், சுந்தரி அனுவின் வீட்டுக்கு சென்றபோது, அங்கு இருந்த கார்த்திக்கிற்கும் சுந்தரிக்கும் ஸ்வீட் கொடுத்த அனு, தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதனால் கார்த்திக் மற்றும் சுந்தரி இருவருமே அதிர்ந்தனர். சுந்தரிக்கும் விஷயம் தெரிந்துவிட்டது என கார்த்திக்கும், கார்த்திக் விஷயம் தெரிந்து சுந்தரியும் அதிர்ந்தனர்.

சுந்தரியின் ஆவேசம்

இதனால் சுந்தரி அதிர்ச்சியில் அங்கேயே மயக்கம் போட்டு கீழே விழ, அவரை மருத்துவமனையில் சேர்த்த பின்னர் அங்கு சென்ற கார்த்திக், “யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள். எனக்கு அனுதான் முக்கியம்!” என நேரடியகவே சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னர் சுந்தரி எதாவது செய்துகொள்வாள் என கார்த்திக்கின் நண்பன் போன் செய்து சொன்னதை அடுத்து அங்கு சென்ற கார்த்திக்கிடம் சுந்தரி ஆவேசமாக பேசி, திட்டி, சவால் விட்டு, அந்த வீட்டில் இருந்து வெளியே தள்ளினார்.

சுந்தரியை கட்டி பிடித்த கார்த்திக்

இந்நிலையில் தான் அனுவின் வீட்டில் அனுவின் புடவையை அணிந்துகொண்டிருந்த சுந்தரியை குடித்துவிட்ட வந்த கார்த்திக் அனு என நினைத்து கட்டிப்பிடிக்க, சுந்தரிக்கு பெரும் கோபம் வந்துவிட்டது. அத்துடன் நிற்காமல் அனு வந்து விசாரிக்கும்போது சுந்தரி, கார்த்திக் திடீரென உள்ளே நுழைந்துவிட்டார், கட்டிப்பிடிக்கவில்லை என கூற, அதற்கு அனு,  ‘என் கணவர் வேறொரு பெண் புடவை மாற்றும்போது போனதற்கு நான் தான் கோவப்படணும், நீ ஏன் கோவப்படுற?’ என சொல்லி கிண்டல் பண்ணி சிரித்தார்.

Also Read: 15 வருடம் முன்பு ஷில்பா ஷெட்டிக்கு ரிச்சர்டு கெர் கொடுத்த முத்த சர்ச்சை!.. மும்பை நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

அனுவிடம் சிக்கிய கார்த்திக்

ஆனால் சுந்தரி கோபத்தில் கிளம்பிவிட, இரவு அனுவிடம் வந்த கார்த்தி, “தெரியாமல் கட்டிப்பிடித்துவிட்டேன் அனு, அது நீயில்லை என தெரிந்தவுடன் நான் விலகிவிட்டேன், என்னை மன்னித்துவிடு” என்று சொன்னதும் அனுவுக்கு புதிய சந்தேகம் முளைத்துவிட்டது. இந்நிலையில் 2வது பொண்டாட்டி என நினைத்து முதல் பொண்டாட்டியை கட்டிப்பிடித்து மாட்டிக்கொண்ட கார்த்திக் எனும் கேரக்டரை ரசிகர்கள் ட்ரோல் செய்துவருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Karthik hugs Sundari Thinking as Anu Sun TV Sundari Serial

People looking for online information on Sun TV, Sundari Karthi, Sundari Serial, Tv Serial will find this news story useful.