"டில்லி WILL BE BACK.. !" - கார்த்தி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவலினை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'கைதி' திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்தியுடன் அஞ்சாதே நரேன், விஜய் டிவி தீனா, மரியம் ஜார்ஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தந்தை மகள் பாசத்திற்கு நடுவே அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள ‘கைதி’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், சிறையில் இருந்து விடுதலையான கைதியாக கார்த்தி நடித்த ‘டில்லி’ கதாபாத்திரம் ரசிகர்களை கவரந்த நிலையில், மீண்டும் டில்லி வருவான் என கார்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது ட்வீட்டில், “என் மீது அளவற்ற அன்பு செலுத்தும், என்னுடைய எல்லா ஏற்ற இறக்கங்களில் எனக்கு உறுதுணையாக இருந்த தம்பி, தங்கைகளை எப்போதும் பெருமைப்படுத்துவேன். உங்களுக்காக டில்லி மீண்டும் வருவான்!!” என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகளை முடித்த பிறகு ‘கைதி 2’ திரைப்படத்திற்கான பணிகளை தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Karthi about Kaithi Sequel that Dilli will be back for you

People looking for online information on Dilli, Kaithi, Kaithi 2, Karthi, Lokesh Kanagaraj will find this news story useful.