பரபரப்பு தலைப்புடன் வெளியான கர்ணன் படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பரியேறும் பெருமாள் படத்துக்கு பின்னர் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார்.

கலைப்புலி S தாணுவின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் 2 சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே தனித்தனியாக வெளியாகின. முதலாவதாக கிடாக்குழி மாரியம்மாள் பாடிய கர்ணன் அழைப்பு என்கிற கண்டா வரச்சொல்லுங்க பாடல் பெருமளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து பண்டாரத்தி புராணம் என்கிற 2வது சிங்கிள் பாடலும் வெளியானது. இந்த பாடலை இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா மற்றும் ரீதா அந்தோணி பாடினர். ஒரு கதையை அழுத்தமாகச் சொல்லக் கூடியதாக அமையும் இந்த பாடலும் முதல் பாடல் அளவுக்கு இல்லையென்றாலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் 3வது பாடல் வரும் மார்ச் 11-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை ஒரு ஸ்பெஷலான பாடகர் பாடவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பாடலுக்கு ‘திரௌபதையின் முத்தம்’என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்களுக்கு வைக்கப்பட்ட அனைத்து பெயர்களுமே சற்று வித்தியாசமாக இருப்பதாலும் இந்த பாடல்கள் கவனம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' திரைப்பட ரிலீஸ் குறித்து வெளியான முக்கிய 'அறிவிப்பு'!

தொடர்புடைய இணைப்புகள்

Karnan 3rd Single details Dhanush கர்ணன் தனுஷ்

People looking for online information on Dhanush, Karnan, Mari Selvaraj, Santhosh Narayanan will find this news story useful.