எதிர்பாராததை எதிர்பாருங்கள்... அடுத்த வாரம் 'டபுள்' எவிக்ஷன் கன்பார்மா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தற்போது அனிதா, அர்ச்சனா, ஆரி, ஆஜீத், பாலாஜி முருகதாஸ், கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், நிஷா, ரியோ ராஜ் , சோமசேகர், சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய 14 போட்டியாளர்கள் உள்ளனர். தீபாவளி உள்ளிட்ட இரண்டு வாரங்கள் பிக்பாஸில் எவிஷன் நடைபெறவில்லை என்பதால், சுச்சி வெளியேறியும் கூட தற்போது வீட்டின் உள்ளே 14 பேர் இருக்கின்றனர்.

இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுச்சி என நான்கு பேர் மட்டுமே வெளியேறி இருக்கின்றனர். அதே நேரம் 50 நாட்களை பிக்பாஸ் கடந்து விட்டது. தற்போது அஸீம் வேறு உள்ளே எண்ட்ரி கொடுத்துள்ளார். இதையடுத்து மீண்டும் போட்டியாளர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இன்னும் சில போட்டியாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் பிக்பாஸ்க்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதை உறுதி செய்வது போல நேற்று நிகழ்ச்சியின் முடிவில், 50 நாட்கள் முடிந்தும் போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று கமல் பேசினார். மேலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றும் கூறினார். இதனால் வரும் வாரம் இரண்டு பேர் வீட்டைவிட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் இதை எதிர்பார்த்து காத்திருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan hints about Double Eviction in BB House?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.