KAMAAL R KHAN: பிரபல பாலிவுட் நடிகர் கமால் R கான் பரபரப்பு கைது.! 2020-ல் போட்ட ட்வீட் தான் காரணமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் கமால் ரஷீத் கான் சில பாலிவுட் பிரபலங்கள் பற்றி கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பல ட்வீட்களைப் பதிவிட்டிருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | Chris Rock: 2023 ஆஸ்கர் விருதை தொகுத்து வழங்கும் வாய்ப்பை நிராகரித்த கிறிஸ் ராக்..?

சர்ச்சை ட்வீட்கள்?

சர்ச்சைக்குரிய அவரது இந்த ட்வீட்கள் அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது, பாலிவுட் துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்திய வகையில் இவர், சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்களை பகிர்ந்திருந்ததாக பலரும் குறிப்பிட்டு அவரது ட்வீட்களை விமர்சித்து வந்தனர்.

அப்படி என்ன கூறியிருந்தார்?

கமால் ரஷீத் கான் தமது ட்வீட்டில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷி கபூர் இறந்துவிடக் கூடாது. ஒயின் ஷாப்கள் இப்போதுதான் திரும்பவும் திறக்கப்படுவதாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அதிர்வை கிளப்பிய இந்த ட்வீட்டை தொடட்ந்து நடிகர் இர்ஃபான் கான் பற்றியும் கமால் ரஷீத் கான் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆம், அந்த ட்வீட்டிலும் சற்றே பரபரப்பான கருத்துகளை கமால் ரஷீத் கான் பதிவிட்டிருந்தார். பின்னர் ஏப்ரல் 29-ம் தேதி பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் அரிய புற்றுநோய் தாக்கத்தால் உயிரிழந்தார். அவர் மறைந்த அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது ஏப்ரல் 30-ஆம் தேதி மற்றுமொரு மூத்த நடிகர் ரிஷி கபூரும் மரணித்தார்.

கமல் ரஷீத் கான்

இதனை தொடர்ந்து பாலிவுட்டின் முக்கிய மற்றும் மூத்த பிரபலங்களான இர்ஃபான் கான் குறித்தும், ரிஷி கபூர் குறித்தும் இவர்களின் இறப்பு நேரத்தில் கமால் ரஷீத் கான் பதிவிட்ட ட்வீட்கள் மற்றும் கருத்துக்கள் தரக்குறைவானவையாகவும், அவை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக இருந்ததாகவும் நடிகர் கமால் ரஷீத் கான் மீது யுவ சேனா அமைப்பினர் புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரை அடுத்து, மும்பை காவல்துறையினர் கமால் ரஷீத் கான் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக மும்பை விமான நிலையத்தில் இன்று காலை கமால் ரஷீத் கானை மும்பை மலாட் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294-ன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆகஸ்ட் 30-ம் தேதி (இன்று) மும்பை போரிவலி நீதிமன்றத்தில் கமால் ரஷீத் கான் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | 11 வருஷத்துக்கு பின் சொந்த மண்ணில் இசை நிகழ்ச்சி.. எதிர்பார்ப்பில் யுவன் ரசிகர்கள்.!

தொடர்புடைய இணைப்புகள்

Kamaal R Khan arrested for controversial tweets on Irrfan, Rishi Kapoor

People looking for online information on Controversial tweets, Kamaal R Khan, Rishi Kapoor will find this news story useful.