ஒரு படத்தையே இயக்கி முடித்துள்ள 'கலாபக் காதலன்' அக்‌ஷயா!.. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடிப்பில் 2006ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் கலாபக் காதலன்.

இத்திரைப்படத்தில் நடிகர் ஆர்யா, நடிகை ரேணுகா மேனன் நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். இதில் கலாபக் காதலன் நாயகி ரேணுகா மேனன் சாஃப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்த கையோடு நடிப்புத்துறையில் இருந்து விலகி, கலிஃபோர்னியாவில் ஸ்டூடியோ ஒன்றை நடத்தத் தொடங்கினார்.

இப்படத்தில் கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்‌ஷயா. அதுமட்டுமல்லாமல் இவர் விஜயகாந்த் நடித்த   ‘எங்கள் ஆசான்’, கலைஞர் கருணாநிதி கதை – வசனம் எழுதிய ‘உளியின் ஓசை’ போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நடிகை அக்‌ஷயா பிறகு என்ன ஆனார் என ரசிகர்கள் தேடிவந்தனர். இதனிடையே  2018-ஆம் ஆண்டு தான் யாளி என்கிற திரைப்படத்தை இயக்குவதாகவும், அப்படம் தொடர்பான விபரங்களை பிரஸ் மீட் ஒன்றில் அறிமுகம் செய்தார். ஆம், அக்‌ஷடா இப்போது நடிகையாக இருந்து திரைப்பட இயக்குநராக அவதரித்துள்ளார்.

இப்படம் பற்றி தற்போது பேசியுள்ள இப்படத்தின் ஹீரோவான தமன் குமார்., “யாளி படத்தின் கதை வித்தியாசமானது. கலாப காதலன் படத்தில் ஆர்யாவின் மச்சினிச்சியாக நடித்த அக்ஷயா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக மாறியுள்ளார். மேலும் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். சில வருடங்கள் கழித்து சினிமாவுக்கு அவர் மீண்டும் திரும்பி வருவதால் தன்னை வலுவாக நிலைநிறுத்தி கொள்ளும் விதமாக ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்திருக்கிறார். இந்த படத்தின் நிறைவுப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன!” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தமன்குமார் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் 80களில் வெளிவந்த  சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கில் நடித்து பிரபலமானார். பின்னர் தொட்டால் தொடரும், ஆறு அத்தியாயம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தற்போது பிரபல சன் டிவி சீரியலான வானத்தைப் போல தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.

யாளி திரைப்படம் குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்ட அக்‌ஷயா, “யாளி படம் நீண்ட போராட்டத்துக்கு பிறகு டப்பிங், பின்னணி இசை என எல்லாமே முடிந்திருக்கிறது. CGயால் தாமதமான இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இப்போது நிறைவு தருவாயில் இருக்கின்றன. இப்படம் கொரோனா சூழல்கள் முடிந்து விரைவில் வெளியாகவிருக்கிறது.

தவிர, ஸ்ரீகாந்த்துடன் இணைந்து தெலுங்கில் Y எனும் த்ரில்லர் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதைத் தவிர பிரப ஓடிடியில் உருவாகும் மாறுபட்ட கதையம்சம் உள்ள வெப் சீரிஸ் ஒன்றிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விரைவில் வெளியாகும்.

அத்துடன் இப்போது சில படங்களில் பாடவும் தொடங்கியிருக்கிறேன்!” என பாசிடிவாக பேசியுள்ளார். 

ALSO READ: “தளபதி சொன்னத follow பண்றேன்!”.. ஒரே நேரத்தில் சினிமா, சீரியலில் கலக்கும் வானத்தைப் போல சீரியல் ஹீரோ!

Kalaaba kathalan fame actress akshaya directed movie update

People looking for online information on Akshaya Rao, Thaman Kumar will find this news story useful.