"கண்மணி அன்போடு காதலன்"! நயன்தாராவுக்கு டப்பிங் சொல்லிக்கொடுத்த விக்னேஷ் சிவன்! VIRAL PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்.  விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ. காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார். கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படம் வருகிற டிசம்பரில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் மூன்று முதல் லுக் போஸ்டர்  (15.11.2021) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமசை முன்னிட்டு டிசம்பர் 23 அல்லது டிசம்பர் 17 அன்று வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக டிசம்பர் 23 அன்று வெளியாக கூடுதல் வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் இன்று துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை புகைப்படங்களுடன் ஒரு டிவீட் செய்து விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். அதில் "கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய டைலாக்ஸ்க்கு நீ டப்பிங் பேசுவது சந்தோஷம்" என கூறியுள்ளார்.

நயன்தாரா இந்த படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Kaathu Vaakula Rendu Kaadhal Movie Dubbing Started

People looking for online information on Kaathuvaakula Rendu Kadhal, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.