PANDIAN STORES : விசேஷ வீட்ல வெச்சு அசிங்கப்படுத்திட்டீங்களே.! மூர்த்தியிடம் கோபத்தில் கத்திய ஜீவா..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சூடுபிடித்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முர்த்தி, கதிர், ஜீவா, கண்ணன் ஆகியோர் அண்ணன் தம்பிகள். இவர்கள் அனைவரும் தத்தம் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் இருந்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

Image Credit : Vijay Television

Also Read | ராம் சரண் நடிக்கும் RC15.. படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர் குதிரை சவாரி.. வைரல் போட்டோ!

இந்த நிலையில் கதிர் தனியாக தனது ஹோட்டலை கவனித்துக் கொள்ள கடைசி தம்பி கண்ணன் வங்கி வேலைக்குச் செல்ல அண்ணன் மூர்த்தியுடன் கடையை பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவுக்கு நெருக்கடிகள் அதிகமாகின்றது. இதே போல் வீட்டில் மீனாவுக்கும் அதிக வேலைப்பளு உண்டாகிறது. இதற்கு காரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மீனாவை தவிர அனைத்து பெண்களுமே கர்ப்பமாக இருப்பதுதான். இதனால் அனைத்து பெண்களுக்கும் மீனா வேலைகள் செய்கிறார்.

இந்த நிலையில்தான் கடையை பார்த்துக் கொள்ளாமல் மீனாவுக்கு வலி வந்ததும் ஜீவா அவரை அழைத்துக் கொண்டு சென்றது குறித்து மூர்த்தி, தன் குடும்பத்தினர் அனைவர் முன்னிலையிலும் வைத்து கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு ஜீவா, “நான் ஆட்டோவில் ஏற்றி விடலாம் என்றால் ஆட்டோவிற்கு நீங்கள் ஒன்றும் காசு கொடுத்து வைக்கவில்லையே? காசு கொடுத்து வைத்தது போல் கேட்கிறீர்களே? எதற்காக கல்லாவை பூட்டி வைத்தீர்கள்? நான் அந்த பணத்தை எடுத்துக் கொண்டே எங்கேயாவது ஓடி விடுவேன் என்று பயந்தா? ஒரு 25 நிமிடம் கடையில் இல்லாததற்கா ஏன் இத்தனை கேள்விகள்?” என்றெல்லாம் அதிரடியாக கேள்விகளை கேட்கிறார்.

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உறைந்துபோய் நிற்கிறது. குறிப்பாக மூர்த்தி நிலைகுலைந்து போகிறார். ஏற்கனவே கதிர் மற்றும் முல்லை ஒரு மனஸ்தாபத்தால் இந்த குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியே சென்று வாழ்ந்து நிலையில், அவர்கள் தற்போது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து விட்டனர்.

இதனிடையே தற்போது மீனாவின் வீட்டு திருமணத்தில் ஜீவாவின் மாமனார் சில சூழ்ச்சிகளை செய்து ஜீவாவை அந்த குடும்பத்தில் இருந்து பிரிக்கும் வேலையை செய்யத் தொடங்குகிறார். இன்னொரு பக்கம் கண்ணன் - ஐஸ்வர்யா, கதிர் - முல்லை என அனைவரும் தனித்தனியே மொய் வைக்க போகின்றனர்.

அது பற்றி மூர்த்தி - தனம் தம்பதிக்கு தெரியாது. ஆனால் ஜீவா - மீனா தம்பதியோ அண்ணன் - அண்ணி மொத்தமாக மொய் வைத்துவிடுவார்கள், நாம் தனியே மொய் வைக்க வேண்டியதில்லை என முடிவெடுக்கின்றனர்.

இந்நிலையில் அனைவரும் தனித்தனியே மொய் வைக்க, கம்ப்யூட்டர் மொய் டேட்டேபேஸில் ஜீவா - மீனாவின் பெயர் மட்டும் இல்லாமல் போகிறது. காரணம் கண்ணன். ஆம், கண்ணன் மொய் வைக்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் மொய் வைக்க சொல்லி தன் அண்ணன் மூர்த்தி கொடுத்த 50 ஆயிரத்தை, சத்தியமூர்த்தி - தனலட்சுமி என்கிற அவர்களது பெயரில் போட்டுவிட்டார். 

இது மீனாவின் தந்தை மூலமாக மீனா & ஜீவாவுக்கு தெரியவர, ஜீவா தன் மூத்த அண்ணன் மூர்த்தி உள்ளிட்ட சகோதரர்களிடம்  ஆவேசமாக வந்து, “எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே.. எனக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே!” என அழுது கத்துகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பெருத்த குழப்பம் ஏற்படுகிறது.

Also Read | 'பத்து தல' சிம்புவின் விரல் மேனரிசம்.. "கலைஞர் அப்படி பண்ணுவாரு".. இயக்குனர் கிருஷ்ணா EXCLUSIVE!

தொடர்புடைய இணைப்புகள்

Jeeva angry with brothers pandian stores 2023 march 20th

People looking for online information on Pandian stores jeeva, Pandian Stores Promo, Pandian Stores Today Episode, Vijay Television will find this news story useful.