ஜெயம் ரவி படத்தில் கீர்த்தி சுரேஷ்?.. அட, அவங்களுக்கு இப்டி ஒரு கதாபாத்திரமா? சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் குறித்து, நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்.! "காதுகளை கவனிச்சுக்கங்க.!" .. மேலாளர் மூலம் வெளியிட்ட தகவல்.

நடிகர் ஜெயம் ரவி நடித்து, அடுத்ததாக பொன்னியின் செல்வன் திரைப்படம், திரை அரங்குகளில் வெளியாக உள்ளது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை  இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

இந்த படத்தில் ஜெயம் ரவியுடன், சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. முன்னதாக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து, கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், அகிலன் திரைப்படத்திலும், எம். ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும், அகமது இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படம் தொடர்பாக அசத்தலான தகவல் ஒன்று, நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது.

அதன்படி, அறிமுக இயக்குனர் ஆண்டனி என்பவரின் இயக்கத்தில், ஜெயம் ரவி புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் திரைப்படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷ், ஒரு கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், தற்போது மீண்டும் ஜெயம் ரவி - ஆண்டனி இணையும் படத்தில், ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

மேலும், சுஜாதா விஜயகுமார் சார்பில், ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக, தகவல்கள் குறிப்பிடும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆரம்பமாக இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் மலையாள ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரம்மாண்ட தயாரிப்பாளர்!

தொடர்புடைய இணைப்புகள்

Jayam ravi and keerthy suresh new movie update sources

People looking for online information on Jayam Ravi, Jayam Ravi New Movie Updates, Keerthy Suresh will find this news story useful.