"நான் பார்த்திருந்தா அப்படி நடந்திருக்காது".. விக்ரமன் சர்ச்சைக்கு ஜனனி விளக்கம்.. EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 70 நாட்களை கடந்த நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | "கழுத்த நெரிச்சு சாக சொன்னாங்க".. நடிகையாகும் முன் ரச்சிதா இவ்ளோ கஷ்டப்பட்டாங்களா..??

இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே போல, ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது. பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ டாஸ்க்கில் கூட நிறைய சண்டைகள் மற்றும் குழப்பங்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறி இருந்தது. முன்னதாக, பிக்பாஸ் இறுதி சுற்று வரை முன்னேறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஜனனி, கடந்த வார இறுதியில் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். ஜனனி பாதியில் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது.

இந்த நிலையில், தற்போது Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை ஜனனி அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்தும், தனது கேம் குறித்தும் பல சுவாரஸ்யமான் தகவல்கள் ஜனனி பகிர்ந்து கொண்டார். அப்போது, அவர் வெளியேறுவதற்கு முன்பாக விக்ரமனுடன் நடந்த சண்டை குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகள் டாஸ்க்கின் போது விக்ரமன் மற்றும் ஜனனி ஆகியோர் ஒரே நேரத்தில் சொர்க்கத்தில் வர முயல, அவர்கள் இருவரையும் தடுக்கிறார் தனலட்சுமி. அந்த சமயத்தில், தனலட்சுமியை தாண்டி விக்ரமன் மற்றும் ஜனனி ஆகியோர் வெளியே வர, முதலில் கோட்டில் விக்ரமன் கைவைக்கிறார். ஆனால், இரண்டாவதாக கைவைத்த ஜனனி, முதலில் கோட்டில் கைவைத்ததாக கூறுகிறார். ஜனனி தான் முதலில் கைவைத்தார் என தனலட்சுமி, அசிம் உள்ளிட்டோரும் கூறுகின்றனர்.

விக்ரமன் தொடர்ந்து முதல் ஆளாக நான் தான் வந்தேன் என கூற, இந்த விஷயம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருந்தது. வார இறுதியில் கமல்ஹாசன் கூட விக்ரமன் முதல் ஆளாக கைவைத்ததை குறிப்பிட்டு பேசி இருந்தார்.

தான் முதலில் கைவைத்ததாக விட்டுக் கொடுக்காமல் பேசியது பற்றி விளக்கம் கொடுத்துள்ள ஜனனி, "உண்மையா நான் பார்க்கல. அப்படி நான் பார்த்திருந்தால் விக்ரமன் நீங்களே இதுல இருங்க அப்படின்னு நான் சொல்லி இருப்பேன். அப்ப நான் விளையாடறப்போ, நம்ம கேம் நம்ம விளையாடுவோம், நாமினேஷன் ஃப்ரீ வந்தா வரட்டும் அப்படின்ற மைண்ட் செட்ல தான் இருந்தேன். எனக்கு என்னன்னா நானே ஃபர்ஸ்ட் கை வச்ச மாதிரி தான் இருந்தது. என்னோட கேம நான் விட்டுக்கொடுத்தா ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் அதுக்கு சில காரணங்கள் சொல்வாங்க, அதாவது நான் வேணும்னு விட்டுக்கொடுத்தேன் அப்படின்னு. அந்த ஒரு காரணத்துக்காக நம்ம கேம் விளையாடனும்னு தான் நான் அத விட்டுக் கொடுக்கல. ஆனா விக்ரமன் ஃபர்ஸ்ட் கை வச்சத நான் பார்த்து இருந்தா கண்டிப்பா அவருக்கு தான் அந்த இடம் குடுத்து இருப்பேன்" என ஜனனி தெரிவித்துள்ளார்.

Also Read | "குழந்தை அமைப்பு என் வாழ்க்கைல இருக்கானு தெரியல, ஆனா".. தேம்பி அழுத ரச்சிதா..!! என்ன ஆச்சு?

"நான் பார்த்திருந்தா அப்படி நடந்திருக்காது".. விக்ரமன் சர்ச்சைக்கு ஜனனி விளக்கம்.. EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Janany explained what happen on clash with vikraman

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Janani, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.