"எனக்கு துரோகம் செய்யணும்னு நெனச்சா".. சரவெடியா வெடிச்ச 'ஜனனி'.. பிக்பாஸ் வீட்டில் அதகளம் தான்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், வீட்டில் புது புது பிரச்சனைகள் உருவாகி வரும் நிலையில், நாளுக்கு நாள் நிகழ்ச்சி முழுக்க விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | Bigg boss 6 tamil : இந்தா வந்துருச்சுல்ல அடுத்த மோதல்.. Doll Task -ல் அமுதவாணன் Vs ஷெரீனா

இதற்கு மத்தியில், மாறி மாறி சில போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்ததும் சமீபத்திய எபிசோடுகளில் அதிகம் பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.

மேலும் முதல் இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜிபி முத்து, குடும்பத்தை பிரிந்து வாடுவதால், அவரே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து அதன்படி செயல்பட்டிருந்தார். அதே போல, சாந்தியும் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார்.

அப்படி ஒரு சூழலில், தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் காரணமாக பல போட்டியாளர்கள் இடையே தொடர்ந்து வாக்குவாதமும் சண்டையும் அரங்கேறி வருகிறது. இதனால், கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வருகிறது.

தற்போது நடந்து வரும் பொம்மை டாஸ்க்கில், போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து தத்தம் பொம்மையினை டால் தொட்டியில் இருந்து டால் ஹவுஸில் சேர்க்கக் கூடிய டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது. இதில் எதிர் அணியினரின் பொம்மையை எடுத்துக்கொண்டும், அவர்களின் பொம்மையை டால் ஹவுஸில் கொண்டு சேர்ப்பதை தடுத்துக் கொண்டும் இந்த கேமை ஆட முடியும்.

இந்த போட்டியின் போது போட்டியாளர்கள் இடையே சிக்கி ஷெரினா கீழே விழுந்ததால் அவரது தலையில் காயமும் ஏற்படுகிறது. உடனடியாக மருத்துவ முதலுதவிக்கு ஷெரினா அனுப்பப்பட்டிருந்த நிலையில், பின்னர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பி இருந்தார். இதனிடையே, ஷெரினா கீழே விழுந்ததற்கு தனலட்சுமியை காரணம் காட்டிய அசீம், அவரை பற்றி கோபத்துடன் சில கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனிடையே, இதுவரை சாந்தமான பெண்ணாக பிக்பாஸ் வீட்டில் வலம் வந்த ஜனனி கூட தற்போது புதிய அவதாரம் எடுத்து கேம் ஸ்பிரிட்டுடன் தீவிரமாக விளையாடி வருகிறார். ராம் பொம்மையை கொண்டு செல்ல முயன்ற போதிலும் அவரை தடுத்து நிறுத்தி வெளியே ஜனனி நிறுத்தி இருந்தது, பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருந்தது.

அப்படி ஒரு சூழலில், சக போட்டியாளர்களிடம் ஜனனி தற்போது பேசும் விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது. அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டோர் அமர்ந்திருக்க அப்போது பேசும் ஜனனி, "நான் எல்லோருக்கும் உண்மையாக இருப்பேன். ஆனால், எனக்கு யாராவது துரோகம் செய்தால் அதற்கு ஏற்ற மாதிரி பழி வாங்குவேன். பழி வாங்குவது என்றால் நேரடியாக அல்ல. என்னை குத்தி விட்டார் என்றால் திரும்ப நான் குத்துவது அல்ல. ஏன் அப்படி செய்தார்கள் என்பதை அவர்கள் உணர வைக்கும் அளவுக்கு நான் செய்வேன்" என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கூட என்னை மாதிரி ஒரு அப்பாவி இந்த உலகத்தில் கிடையாது என்றும் அதே வேளையில் என்னை போல ஒரு கெட்டவளும் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது என்றும் பொம்மை டாஸ்க் ஆரம்பத்தில் ஜனனி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | Bigg boss 6 tamil : "இந்த நடிப்பெல்லாம் சீரியல்ல வெச்சுக்க".. சீறிய அசீம்.. சீரியஸாக பேசிய அமுதவாணன்.!

தொடர்புடைய இணைப்புகள்

Janani speech with amudhavanan in biggboss 6 tamil

People looking for online information on Amudhavanan, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Janani, Vijay Television, Vijay tv will find this news story useful.