“பப்லூ DIVORCE-க்கு நான் காரணமா?”.. “அவர்தான் ஐ லவ் யூ சொன்னாரு.!” - ஷீத்தல் EXCLUSIVE.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1971-ம் ஆண்டு நான்கு சுவர்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பப்லூ பிரித்விராஜ், தொடர்ந்து சிவாஜி, ரஜினி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "சொல்ல தான் முடியும்..".. அடுத்தடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் தனது 2 படங்கள் .. சசிகுமார் ஆதங்கம்.!

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள பப்லூ ப்ரித்விராஜ், மர்மதேசம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் என்டரி ஆனார். தொடர்ந்து, வாணி ராணி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த இவர், தற்போது சன்டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் நாயகியின் அப்பாவாக நடித்து வருகிறார்.

மேலும் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள பப்லூ ப்ரித்விராஜ் கடந்த 1994-ம் ஆண்டு பீனா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆஹத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், நடிகர் பப்லூ ப்ரித்விராஜ் மலேசியாவை சேர்ந்த 23 வயது பெண்னை 2-வது திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், இதுகுறித்து தமது பெண் தோழி ஷீதலுடன் இணைந்து பிஹைண்ட்வுட்ஸ் நேர்காணலில் பிரத்தியேகமாக பேசியிருந்தார்.

அப்போது முதல் கேள்வியாக குறிப்பிட்ட இந்த விவகாரம் தொடர்பான பேச்சுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பதில் அளித்த பப்லூ பிரிதிவிராஜ், “எனக்கு 56 வயதாகிறது. ஷீத்தலுக்கு 24 வயதாகிறது. இந்த ஒரு விஷயத்தை தாண்டி நாங்கள் என்ன தப்பு செய்தோம்? நான் எவ்வளவோ நலத்திட்டங்களை செய்கிறேன். அது பற்றி யாரும் பேசுவதில்லை. இப்படி பேசுவது வாடிக்கையாகிவிட்டது. நேரடியாக அநாகரிகமாக பேசுபவர்களுக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. சிலர் இந்த வயசுல இதெல்லாம் கேட்குதா என்று கேட்கிறார்கள். அப்படி கேட்டால் எப்படி பதில் சொல்வது? அவர்களுக்கு தகுந்த பதில்தான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. சகோதரியின் திருமணத்துக்கு செல்லும் பொழுது நான் ஷீத்தலை கேர்ள் ஃபிரண்ட் என்று சொல்லாமல் மனைவி என்று சொல்லிவிட்டேன். அதில்தான் அனைத்தும் தொடங்கியது. மற்றபடி என் வாழ்க்கை பற்றி பேசுபவர்கள் யாருக்குமே என்னுடைய ஒருநாள் வாழ்க்கை பற்றி தெரியாது. பிக் பாஸ் காஜல் பசுபதி என் குறித்த விஷயங்களை பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார். அப்போதுதான் இந்த விஷயம் பூதாகரமாகி வெளியில் பேசப்பட்டு கொண்டிருப்பதை நான் அறிந்தேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இவர்களின் உறவு குறித்து பேசிய ஷீத்தல், “என்னால் அவர் விவாகரத்து ஆகவில்லை. அவர் 6 வருடமாகவே மனைவியை பிரிந்து வாழ்கிறார். பிரிவதற்கு முன்னால் அவர் முந்தைய மனைவி அவர்களிடம் சென்று தான் தனிமையுடன் இருப்பதாகவும், மீண்டும் அவர் தன்னுடன் வாழ வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் அப்படியானால் யாரையாவது  இணையராக தேடிக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டார். அதன் பிறகே நாங்கள் உறவில் இணைந்தோம். அவரே என்னிடம் முதலில் எனக்கு என் பிறந்த நாளில் ஐ லவ் யூ என தெரிவித்தார். ஆனால் எங்கள் உறவுகுறித்து இன்னும் அவரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பேசியவர், “வாழ்க்கை கண்டு எல்லாருக்குமே பயம் இருக்கும். ஆனால் அனைத்தையும் வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்தான். ஆனால் வல்கராக கமெண்டுகள் வருவதை சோசியல் மீடியாக்களில் வந்தது வருத்தமாக இருந்தது. அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லா, மற்ற மனிதர்களை பற்றி அவர்கள் சொல்லும் வார்த்தைகள் குறித்த கவனம் அவர்களுக்கு இருத்தல் வேண்டும். உங்களுக்கு எங்களை பிடித்திருந்தால் அன்பை தாருங்கள், இல்லை என்றால் விலகி செல்லுங்கள்” என ஹேட்டர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பல விஷயங்களை ஷீத்தல் பேசியுள்ளார். அவற்றை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.

Also Read | “ரஞ்சிதமே பாட்டு செம”.. ‘வாரிசு’ & ‘துணிவு’ ரெண்டுல எந்த படம் பாப்பீங்க ? - சசிகுமார் பதில்ஸ்!

“பப்லூ DIVORCE-க்கு நான் காரணமா?”.. “அவர்தான் ஐ லவ் யூ சொன்னாரு.!” - ஷீத்தல் EXCLUSIVE.! வீடியோ

Im not reason for Babloo Prithiviraj Divorce Says Sheetal

People looking for online information on Babloo Prithiviraj, Sheetal will find this news story useful.