“சப்புனு அறையணும்.. கோவம் வருது!”.. எப்பவும் கூலாக இருக்கும் ராஜூ பாயா இது? என்ன நடந்தது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossTamil5: பிக்பாஸ் வீட்டில் தாமரையிடம் ராஜூ, “சப்புனு அறையலாம் எனும் அளவுக்கு கோபம் வருகிறது!” என்று சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertising
>
Advertising

ராஜூ பாய்

பிக்பாஸ் வீட்டில் ராஜூ அனைவருக்கும் பாதகமும் இல்லாமல் சாதகமும் இல்லாமல் நடந்து கொள்வதாக பெயர் எடுத்திருக்கிறார். எனினும் பல இடங்களில் சக போட்டியாளர்களுக்காக, விட்டுக்கொடுத்து விளையாட்டை விளையாடுகிறார்  என்று ஹவுஸ்மேட்ஸால் ராஜூ மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ராஜூ - வைத்தியர்

எந்த ஒரு கருத்தையும், விமர்சனத்தையும் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகவும், எதார்த்தமாகவும் சொல்லும் ராஜூ, அதனால் இன்னொருவர் காயப்பட கூடாது என்பதற்காக அப்படி சொல்லும் முறையை எப்போதுமே கையாள்வதாக ஒருமுறை கமல்ஹாசன் முன்னிலையில் குறிப்பிட்டு இருந்தார்.
அப்போது, “மருந்தை தேனில் குழைத்து கொடுக்கும் வைத்தியர்!” கமல்ஹாசன் ராஜூவுக்கு என்று செல்லப்பெயர் வைத்தார்.‌ இப்படிப்பட்ட ராஜூ பல நேரங்களில் பிரியங்கா மற்றும் தாமரை இருவரின் உறவு குறித்தும், சண்டை குறித்தும் இருவரிடமும் நேரடியாக பேசி இருக்கிறார். நேரடியாக விமர்சித்தும்இருக்கிறார்.

கட்டி உருளுருதா காட்டிக்கிறீங்க!

குறிப்பாக, “தாமரை மற்றும் பிரியங்கா இருவரும் உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர். ஆனால் டாஸ்க்கின் போது மட்டும் தான் சண்டை போட்டுக் கொள்வதாகவும் மற்ற நேரங்களில் கட்டி உருண்டு கொள்வதாகவும் இருவருமே காட்டிக் கொள்கின்றனர்!” என்று தம் விமர்சனத்தை சமீப நாட்களாகவே ராஜூ முன்வைத்துக் கொண்டு வருகிறார்.‌

நிரூப் போய்ட்டா நான் அனாதை

இதனிடையே தாமரை மற்றும் பிரியங்கா இருவரிடையேயும், கடைசியாக நடந்த முட்டை உடைக்கும் மற்றும் தற்காத்துக் கொள்ளும் டாஸ்கில் எழுந்த வாக்குவாதமும் அதன் தொடர்ச்சியாக நடந்த தள்ளுமுள்ளு சண்டையும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரபரப்பானது.

இதனை அடுத்து தாமரை தனக்கு நிரூப் மட்டுமே ஆதரவாக இருப்பதாகவும், அதற்கு முன்புவரை வருண் மற்றும் அக்‌ஷரா இருவரும் ஆதரவாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் நிரூப்பும் பிக்பாஸ் வீட்டை விட்டு சென்று விட்டால் தான் ஒரு அனாதை என்று ராஜூவிடம் தாமரை சொல்லிக்கொண்டிருந்தார்.

சப்புனு அறையணும் போல கோவம் வருது

இந்த நிலையில் இதுபற்றி மீண்டும் தாமரையிடம் தற்போது பேசிய ராஜூ, “உண்மையில் உன்னை பிடித்தவர்களுக்கு நீ சொல்லும் இப்படியான விஷயங்கள் கோபத்தை வரவழைக்கலாம். நிரூப் போனால் நீ அனாதை என்று என்னிடம் சொல்லும் போது எனக்கு சப்பென உன்னை அறையலாம் போல் கோபம் வருகிறது.

இப்போதும் வந்த கோபம் இருக்கிறது. இதற்கு என்ன செய்வது? என்று கேட்டார். உன் அந்த வார்த்தைகள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பலருக்கு பொருந்தாமல் இருக்கும் பொழுது எப்படி அந்த வார்த்தைகளை ஏற்பது?” என்று பேசிய ராஜூ தாமரைக்கு அதை புரியவைக்க முயற்சி செய்தார்.

தாமரை முதலில் தன் மனநிலையையே அப்படி வெளிப்படுத்தியதாக கூறியிருந்த நிலையில், தொடர்ந்து ராஜூ பேசப்பேச சமாதானமானதாய் தலையாட்டிக் கொண்டு இருந்தார்.

Also Read: BiggBoss வீட்டில் தாமரைக்கு வந்த புதிய பிரச்சனை!..  பிரியங்கா செய்த நெகிழ்ச்சி காரியம்! உறைந்து போன சிபி!

தொடர்புடைய இணைப்புகள்

Im angry thiniking of slapping you raju to thamarai biggboss

People looking for online information on BiggBoss5, Priyanka thamarai, Raju, Raju Bhai, Thamarai will find this news story useful.