''துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது. இது...'' - SPB-ன் மறைவு.. இளையராஜா உருக்கம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் எஸ்.பி.பியின் மறைவுக்கு., இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் ஒரு மணியளவில் காலமாகியுள்ளார்.

இதையடுத்து எஸ்.பி.பியின் மறைவுக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் இளையராஜா தனது உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ''சீக்கிரம் எழுந்து வா, நான் உன்னை பார்க்க காத்திருக்கிறேன் என்றேன், நீ கேக்கல, கந்தவர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா பாலு, உலகம் சூனியமாகிவிட்டது. பேசுவதற்கு பேச்சு வரவில்லை, சொல்வதற்கு வார்த்தை வரவில்லை, எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது, இதற்கு அளவு இல்லை'' என்று அவர் தெரிவித்தார். இளையராஜா - எஸ்.பி.பி கூட்டணி காலத்தால் அழியாத பல ஹிட் பாடல்களை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

''துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது. இது...'' - SPB-ன் மறைவு.. இளையராஜா உருக்கம். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ilayaraja condolences on singer sp balasubrahmanyam demise

People looking for online information on Ilaiyaraja, SP Balasubrahmanyam, SPB will find this news story useful.