ஒரே சூரியன்.. ஒரே இளையராஜா & பாரதிராஜாதான் – தெறிக்க விட்ட இசைஞானி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காதல் செய் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இசைஞானி இளையராஜா பேசியது வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

KGF2: “குறுக்க மட்டும் போயிடாதீங்க”… மாஸ் வரிகளில் அதகளம்- வெளியான TOOFAN பாடல்!

பிஸியான இசைஞானி

இதுவரை 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப் படங்கள் என தன் இசையால் இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் இசைஞானி இளையராஜா. திரைப்பட பாடல்கள் மட்டும் என்று இல்லாமல் இசைஞானி இளையராஜா தம்முடைய இசையை மட்டுமே கொண்டு, அதாவது பாடல் வரிகள் இல்லாமல், இசைக்கருவிகளை மட்டுமே கொண்டு உருவாக்கிய மியூசிக்கல் ஆல்பங்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். அதுபோல சிம்ஃபொனி எனும் இசைவடிவத்திலும் கால்பதித்து சாதித்துள்ளார். தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவரின் வீட்டிலும் ரேஷன் கார்டில் பேர் இல்லாத உறுப்பினராக இருந்துவருகிறார்.

ராக் வித் ராஜா கச்சேரி

தனது இசை ரசிகர்களை மகிழ்விக்க அவ்வப்போது இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார் இசைஞானி. சில வருடங்களுக்கு முன்னர் நடந்த ’இளையராஜா 75' மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. அதையடுத்து கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 18 ஆம் தேதி  சென்னை தீவுத்திடலில் ராக் வித் ராஜா என்ற கச்சேரி நடந்தது. அதில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

மேடையில் தெறிக்கவிட இளையராஜா

இந்நிலையில் கச்சேரி முடிந்த சில தினங்களில் நடந்த ஒரு டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ள இளையராஜா இந்த முறை தன் பேச்சால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்த நிகழ்வுக்கு இயக்குனர் பாரதிராஜா மற்றும் பி வாசு ஆகியோரும் இளையராஜாவோடு கலந்துகொண்டனர்.

அப்போது அவர்களை அருகில் வைத்துக் கொண்டு பேசிய இளையராஜா ‘நிகழ்கால பாரதிராஜாக்களே… நிகழ்கால பி வாசுக்களே… நிகழ்கால இளையராஜாக்களே… ஏன் எதிர்கால பாரதிராஜாக்களே, இளையராஜாக்களே… ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் எல்லா காலத்துக்கும் பாரதிராஜா ஒருவர்தான். இளையராஜா ஒருவர்தான். பி வாசு ஒருவர்தான்.  எப்படி சூரியன் மாதிரி இன்னொன்று வருவதில்லையோ. அதுபோல ஒருத்தர போல இன்னொருத்தன் வருவதில்லை…. அதுலாம் பொறந்து வரணும்யா. திருவள்ளுவரே சொல்லி இருக்காரு ’செல்வம் படச்சவனா இருக்குறது வேறு… தெள்ளியவனா இருக்குறது வேறு… தெள்ளியவன்னா தெளிந்த அறிவோடு இருக்குறவன். தெய்வமா கூட இருக்கலாம்.. ஆனா தெளிந்த அறிவுடையவனா இருக்குறது கஷ்டம்.

இவர்கள எல்லாம் (பாரதிராஜாவைக் கைகாட்டி) தெளிந்த அறிவுடையவர்கள். இந்த படத்துக்கு காதல் செய்னு பேர் வச்சுருக்காங்க… என்ன போல காதல் செய்யுறவன் இருக்க முடியாது… ஆனா நான் எத காதலிக்குறனும்கிறதுல தெள்ளியனா இருகேன். இந்த படத்தோட விழாவுக்கு இவளோ பேர் வந்து ஆதரவு கொடுத்திருக்கீங்க…16 வயதினிலே பண்ணும்போது இவ்ளோ கேமரா கிடையாது. இவ்ளோ மீடியா கிடையாது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்’ எனப் பேசி விழாவுக்கு வந்தவர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

போடு சக்க.. வாடிவாசல் டெஸ்ட் ஷூட் ஃபோட்டோ பகிர்ந்த வெற்றிமாறன் பட நடிகர்!

தொடர்புடைய இணைப்புகள்

Ilayaraaja mass speech Bharathiraja 16 vayathinile

People looking for online information on 16 Vayathinile, இசைஞானி, இளையராஜா, பாரதிராஜா, Bharathiraja, Ilayaraaja, Ilayaraaja mass speech will find this news story useful.