வேணாம்னா வெலகிக்கங்க... இதுக்கு போய் 'இவ்ளோ' பெரிய பஞ்சாயத்தா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் கிச்சன் பஞ்சாயத்து மீண்டும் தொடங்கி விட்டது. குக்கிங் டீம் கேப்டன் அனிதா கடலைப்பருப்பை ஊறவைத்து விட்டு, மறந்து விட்டார். இதை ஆரி, பாலாஜியிடம் சொல்ல அவர் அனிதாவிடம் இதுகுறித்து கேட்டார். ஆனால் அனிதா பாலாஜி கேட்டதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. என்றாலும் பாலாஜி இந்த விஷயத்தை அவ்வளவு எளிதில் விடவில்லை.

கார்டனில் ஆரம்பித்த இந்த பஞ்சாயத்து மீண்டும் வீட்டுக்குள் வந்தும் முடியவில்லை. உங்களுக்கு குக்கிங் டீம் கேப்டனா இருக்க புடிக்கலனா விலகிக்கிங்க. வேற யாராவது பொறுப்பை ஏத்துப்பாங்க என பாலாஜி அனிதாவிடம் கூறினார். இதனால் இருவருக்கும் இடையில் மீண்டும் முட்டிக்கொண்டது. கடைசியில் ரம்யா ஸாரி சொல்லி இந்த விஷயத்தை முடித்து வைத்தார்.

இதோடு இந்த பிரச்சினை முடிந்தது என்றால் அங்கு தான் ஒரு பெரிய டிவிஸ்ட். கடலைப்பருப்பே கதறும் அளவுக்கு இந்த பிரச்சினையை ஜவ்வு மிட்டாயாக ஆரம்பித்து கடைசியில் இருவரும் பரஸ்பரம் ஸாரி கேட்டுக்கொண்டு பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் மறுபடியும் மொதல்ல இருந்தா? என கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

'If you don't like please' Balaji requested to Anitha

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.