“நான் திருடல.. அசிங்கமா இருக்கு.. அவமானமா இருக்கு”.. கதறி அழுத தனலட்சுமி BIGG BOSS 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "என்ன பிடிச்ச மாதிரி நடிக்கலாம்ல.?".. ஃபீல் பண்ணிய ராபர்ட்.. ரச்சிதா வைரல் பதில்.! bigg boss 6

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு கடந்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடந்துள்ளது. இதில் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இனிப்பு கடைகளை வைத்தனர். இவற்றுக்கான தயாரிப்பு பண்டங்களை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்தனர். இதில் உருவான விஷயங்கள் குறித்து இந்த வார் இறுதியில் கமல்ஹாசன் பேசியிருந்தார்.

இவர்களுள் மகேஸ்வரி பொருத்தவரை தொடக்கம் முதலே ஆக்டிவாக இருந்தார். கிச்சனில் பொறுப்புடன் சமைத்து வந்த இவர்,  ஆங்காங்கே சண்டைகள் சச்சரவுகள் தொடங்கி பிக் பாஸ் வீட்டில் தம்முடைய பங்களிப்பை கொடுக்கும் வகையிலும் இருப்பை காட்டும் வகையிலும் நடந்துள்ளார். அதே சமயம் சகப் போட்டியாளர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார். சகப் போட்டியாளர்களால் விமர்சிக்கவும் பட்டிருக்கிறார். பாராட்டவும் செய்யப்பட்டிருக்கிறார். இவர்தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் , கன்ஃபெஷன் ரூமில் பிக்பாஸிடம் பேசும் தனலட்சுமி, “போன வாரம் நடந்த ஸ்வீட் டாஸ்கில் அடை தேனடை இனிப்பு கடையின் கல்லாப்பெட்டியில் இருந்து எடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா கல்லாப்பெட்டிக்குள் நான் காசை வைக்கவில்லை. திருட்டுப் போய் விடுமோ என்கிற பயத்தில்தான் என் கல்லாப்பெட்டியில் இருந்த காசை எடுத்து இரவில் வைத்துக் கொண்டேன். இது ஒரு பெரிய விஷயமாக மாறிவிட்டது. அந்த வார இறுதியில் நான் மணிகண்டனுடன் சண்டை போட்டது என பல விஷயங்கள் பற்றிதான் கமல் சார் வரும்போது பேசுபொருளாக அமையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இந்த விஷயம் எப்படியோ வந்து விட்டது. நான் இப்படி வீட்டுக்குள் செய்யக்கூடிய சின்ன சின்ன விஷயங்களும் இது போல் மாறும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இது எனக்கு அவமானமாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது. நான் திருடவில்லை, ஆனால் வெளியில் இது எப்படி பார்க்கப்படுகிறது என்பதை நினைத்தால் மிகவும் அவமானமாக இருக்கிறது. இப்போது என் நிலை இதுதான், நான் மிகவும் மன அழுத்தத்துடன் இருக்கிறேன்.

நான் விளையாட்டாக செய்த ஒரு விஷயம் இவ்ளோ பெரிய அவமானத்தில் என்னை கொண்டு வந்து நிறுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதை ஹவுஸ் வைஃப் யாரிடமும் சொல்ல முடியவில்லை. சொன்னால் அதற்கு ஒரு விளக்கம் நான் கொடுப்பதாக ஆகிவிடும், நான் இதை மனசுக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் விளையாட்டாக டாஸ்கில் பண்ணிய இந்த விஷயமே இவ்வளவு பெருசாக வெடிக்கும் பொழுது நான் நாளைக்கு சின்ன சின்ன விஷயங்கள் நிறைய செய்வேன், அதெல்லாம் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரியவில்லை.

அதுபோன்ற என்னுடைய விஷயங்களை இந்த 16 பேருக்காக மாற்றிக் கொள்ள முடியாது, நான் மிகவும் விரும்பி தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன், இப்போது நானே இந்த விஷயங்களால் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.‌ ஆனால் எனக்கு இப்படி அசிங்கமாக அடம் பிடித்து இங்கிருந்து செல்ல வேண்டும் என்று யோசனை இல்லை. நாமினேஷனில் வெளியே செல்ல வேண்டும், உங்களால் முடிந்தால் ஏதாவது செய்யுங்கள்!” என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுகொண்டே தனலட்சுமி பேசுகிறார்.

Also Read | எப்புடுறா டக்குனு திருந்த முடியும்..! - அசீம் பற்றி கிசுகிசுத்த மைனா - ஆயிஷா .. வைரல் ப்ரோமோ bigg boss 6

தொடர்புடைய இணைப்புகள்

I feel very dhanalakshmi cries in Confession room bigg boss 6

People looking for online information on Bigg boss 6 maheswari, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Maheswari elimination will find this news story useful.