COOL SURESH : “வீட்டு வாடகை கூட பணம் இல்ல?”.. சிம்புவின் வார்த்தை போதும்.. கதறிய கூல் சுரேஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரையரங்கில் புது படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் அலை மோதி கொண்டிருக்கும் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று அந்த திரைப்படம் மாஸ் நடிகரின் திரைப்படமாக இருக்கக்கூடும். இன்னொன்று அந்த திரைப்படம் வெளியிட்ட நாளில் திரைப்படம் பார்க்க வந்திருப்பவர்களின் மத்தியில் ஒருவராக கூல் சுரேஷ் இடம் பெற்று இருப்பார் என்பது தான்..

Advertising
>
Advertising

Also Read | செம..தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. படத்தில் இணைந்த பிரபல இளம் நடிகர்! இவரா?

சென்னையின் பிரபல தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் செல்லும் கூல் சுரேஷ் ரசிகர்களால் மட்டுமல்லாமல், பிரபல யுடியூப் சேனல்கள் பலவற்றாலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒருவர். ஒரு படத்தை பார்த்து விட்டும், படத்தை பார்ப்பதற்கு முன்பாகவும் கூல் சுரேஷ் அந்த படத்தைப் பற்றி என்ன கருத்து சொல்கிறார் என்பதை காண்பதற்கும், கேட்பதற்கும் இளைஞர்கள் பலரும் ஆவலாக இருப்பதை யூடியூபில் காண முடியும். முன்னதாக சில திரைப்படங்களில் நடித்திருக்கும் கூல் சுரேஷ், தற்போதைய காலகட்டங்களில் தொடர்ச்சியாக திரைப்படங்களுக்கு செல்வதும், முதல் நாள் முதல் ஷோவுக்கு வந்து திரைப்படங்களை பார்த்துவிட்டு படங்கள் குறித்து மீடியாக்கள் முன்பாக பேசுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. எதிரணியில் திடீரென கூல் சுரேஷ், தான் இனி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ரிவியூவ் பண்ணப்போவதில்லை என்று கூறி இருக்கிறார்.

அண்மையில் நடந்த சில சம்பவங்கள் தொடர்பாக பேசிய கூல் சுரேஷ், மிகவும் உருக்கமான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “நான் தொடர்ச்சியாக ரிவ்யூ பண்ணுவது, யாருக்காக ? எதற்காக ? எல்லாம் ரசிகர்களுக்காகவும் என் தலைவன் சிம்புவுக்காகவும்தான். இப்படி ரிவ்யூ தொடர்ந்து பண்ணுவதால் எனக்கு பணம் வருகிறது என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. அதன் மூலம் எனக்கு எந்த சம்பாத்தியமும் வருவதில்லை. நான் இன்னும் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியவில்லை. வண்டிக்கு டியூ கட்ட முடியவில்லை என்கிற நிலைமையில் தான் இருக்கிறேன். என்னுடைய தலைவர் சிம்பு கூட என்னிடம் கூறினார், ‘நான் தியேட்டருக்கு போனால் கூட அவ்வளவு கூட்டம், ரெஸ்பான்ஸ் இருப்பதில்லை.. நீ போனால் இவ்வளவு ரெஸ்பான்ஸ் வருகிறது.. இதை மட்டும் நீ விட்டு விடாதே.. தக்க வைத்துக்கொள்’ என்று கூறியிருந்தார்.  இப்படி ஒரு வார்த்தை வேறு யார் கூறுவார்கள் ? யாராவது கூறுவார்களா?” என்று கூல் சுரேஷ் உருக்கமாக பேசியிருக்கிறார்.

மேலும் பேசிய கூல் சுரேஷ், “நான் என்ன துரோகம் உங்களுக்கு செய்தேன்? உங்களை யாராவது வம்பு இழுத்தேனா? உங்கள் வீட்டில் வந்து பிரச்சினை செய்தேனா? பிடிக்கவில்லை என்றால் நான் ரிவ்யூ செய்யவில்லை. இப்போதும் சொல்கிறேன் வெந்து தணிந்தது காடு திரைப்பட புரமோஷனுக்காக சிம்பு எனக்கு நன்றி கூறினார். என் தலைவனுக்காகவும் ரசிகர்களுக்காகவும் நான் தொடர்ந்து இதை செய்து கொண்டே இருப்பேன். எனக்கு என் நண்பர் சந்தானம் உதவி செய்வார். என் மீது அக்கறை உள்ள ஒரு 10 இயக்குனர்கள் எனக்காக செய்வார்கள்” என்று அந்த வீடியோவில் அழுதபடி பேசுகிறார்.

கூல் சுரேஷ் தொடர்ச்சியாக வெந்து தணிந்தது காடு என்று சொல்லி எந்த படம் ரிலீஸ் ஆகிறதோ, அந்த படத்தின் பெயரைச் சொல்லி அல்லது அந்த நடிகரின் பெயரைச் சொல்லி, வணக்கத்தை போடு என்று பேசுவார். அதன்படி வெந்து தணிந்தது காடு.. சிம்புவுக்கு வணக்கத்தை போடு என்ற தன் ஆதர்ஷ வசனத்தை முன்வைத்து கூல் சுரேஷ் நிறைவே பேசினார். இது பற்றி சிம்பு ட்விட்டர்ஸ்பேஸில் பேசும்பொழுது, கூல் சுரேஷ், ‘இந்த திரைப்படத்துக்காக உண்மையில் விளம்பரம் செய்திருக்கிறார், அவருக்கு நன்றி’ என்று தெரிவித்திருந்தார். இதையும் குறிப்பிட்டுதான் , தற்போது கூல் சுரேஷ் நெகழ்ந்து போய் பேசி இருக்கிறார்.

Also Read | 150 கிமீ வேகத்தில் G P முத்து உடன் பைக் ரைடு.. TTF வாசன் மீது பாய்ந்த போலீஸ் கேஸ்! முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

I dont have money to even pay my rent, Cool Suresh video

People looking for online information on Cool Suresh, Str, Vendhu Thanindhathu Kaadu, VTK will find this news story useful.