'அந்த' ரெண்டு விஷயம்.... பண்ணவே கூடாதுன்னு 'நெனச்சேன்' ஆனா முடியல!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திடீரென பிக்பாஸ் ஒவ்வொரு போட்டியாளராக அழைத்து இந்த பிக்பாஸ் அனுபவம் எப்படி இருந்தது? என கேட்டு வருகிறார். போட்டியாளர்கள் அழாமல் இருந்தால் கூட உருக்கமாக பேசி அவர்களை வெகுவாக அவர் அழ வைப்பதும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஷிவானி, ரியோ இருவரையும் அழைத்து அழவைத்து ஆறுதல் சொல்லி அனுப்பினார்.

ஷிவானி அழுத அழுகைக்கு பிக்பாஸ் செட்டே நனைந்து போயிருக்கும். நேற்று இந்த லிஸ்டில் அனிதா, அர்ச்சனா இருவரையும் அழைத்து அழவைத்தார். கண்டெண்ட் கிடைக்கவில்லையா? என்று தெரியவில்லை. இருவரையும் சற்று சீக்கிரமாகவே அனுப்பி வைத்து விட்டார். இதில் அனிதாவிடம் பேசும்போது கண்ணுக்குட்டி என பிக்பாஸ் அழைக்க அனிதா அழ ஆரம்பித்து விட்டார்.

அவர் பேசும்போது,'' இந்த வீட்டுக்கு வரும்போது அழக்கூடாது, கோபப்படக் கூடாதுன்னு முடிவு பண்ணி தான் வந்தேன். ஆனா அந்த ரெண்டு விஷயத்தையும் நான் மீறிட்டேன். வீட்டுக்கு போய் என் ஹஸ்பெண்ட் கால்ல விழுந்து ஸாரி கேட்கணும்,'' என உருக்கமாக பேசினார். தன்னுடைய விளையாட்டை தைரியமாக விளையாடுவதால் அனிதா டாப் 5 போட்டியாளராக வருவார் என எதிர்பார்க்கப் படுகிறது. 

தொடர்புடைய இணைப்புகள்

'I Could Not' Anitha Sampath Cried in Confession Room

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.