நான் வந்ததே 'உங்களுக்காக' தான்... ஆரி 'ஹேப்பி' அண்ணாச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று முன்தினம் அர்ச்சனா, ரமேஷ், நிஷா, ரேகா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தனர். நேற்று மீண்டும் சனம், சுசித்ரா, சம்யுக்தா, ஆஜீத், வேல்முருகன் ஆகியோர் வீட்டுக்குள் வந்துள்ளனர். இதில் சனமின் நுழைவு ரசிகர்களால் கொண்டாடப்பட, இந்தியளவில் தற்போது சனம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். வீட்டில் உள்ள அனைவருடனும் சகஜமாக பேசிய சனம், ஆரியிடம் சென்று நான் உள்ள மறுபடி வந்ததே உங்களுக்காக தான் என்றார்.

இதைக்கேட்டு ஆரியும் முகத்தில் சந்தோஷத்தை காட்டினார். ரம்யா, பாலாஜி எல்லோரையும் தொடர்ந்து ஒன்லைனர்களால் கலாய்த்த சனம் டாஸ்க்குகளிலும் சந்தோஷமாக பங்கெடுத்தார்.இந்த நிலையில் ஆரியிடம், சனம் சொன்ன வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஆரியோட பிரண்ட் வந்துட்டாங்க என மகிழ்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரம் அனிதா, சுரேஷ் சக்கவர்த்தி ஆகியோரை மிஸ் செய்வதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

'I came to here for You only' Netizens praised Sanam

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.