“தாமரை டிரெஸ் மாத்தும்போது ஏன் டவலால மறைச்சீங்க?”.. பாவனி, சுருதியிடம் ஹவுஸ்மேட்ஸ் கேள்வி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் காயின் டாஸ்க் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. காயின் டாஸ்க்கை மையமாக வைத்து சூடான பல விவகாரங்கள் நடக்கின்றன. குறிப்பாக தாமரை குளித்து முடித்துவிட்டு பாத்ரூமில் ஆடை மாற்றும்போது அவருடைய காயினை, ஸ்கெட்ச் போட்டு பாவனியின் உதவியுடன் சுருதி எடுத்த சம்பவம் பரபரப்பாகி இருக்கிறது.

Advertising
>
Advertising

அதாவது தாமரைக்கு உதவுவதாக பாத்ரூம் சென்ற பாவனி, தாமரைக்கு டவலை வைத்து மறைக்க, தாமரையின் காயினை எடுத்துக்கொண்ட சுருதி, நேரே வந்து பிக்பாஸின் கேமராவில் காட்டி ‘காற்று’ எனும் நாணயத்தை தான் எடுத்து விட்டதாகவும், இனி அந்த நாணயம் தனக்கு சொந்தம் என்றும் பதிவு செய்தார்.

ஆனால் பின்னர் ஆடை மாற்றிவிட்டு வெளிவந்த தாமரை சுருதியிடம், “இது தப்பு பாப்பா.. இது துரோகம்.. நம்பிக்கை துரோகம்.. உன்னை எவ்வளவு நம்பினேன்.. உன்னிடம் எப்படி எல்லாம் பழகினேன்.. நீ எனக்கு இந்த நிலைமையில் இப்படி செய்திருக்கிறாயே?” என்று அழுதும் புலம்ப, ஒன்று சேர்ந்த சிபி, ராஜூ, இமான் அண்ணாச்சி சுருதி மற்றும் பாவனியிடம் இது முறையல்ல என்று வாதிட்டனர்.

பின்னர் சிபி, ராஜூ, இமான் அண்ணாச்சி, நிரூப், பிரியங்கா, சின்னபொண்ணு மற்றும் அக்‌ஷரா முன்னிலையில் இந்த பேச்சு தொடர, அப்போது அங்கு வந்த பாவனியும் சுருதியும், தாமரை உள்ளே நடந்ததை சரியாக புரிந்துகொள்ளும்படி கூறவில்லை என்று கூற, சுருதியோ, அப்படி உங்களை அசிங்கப்படுத்தி எடுக்க வேண்டியதில்லை. நாங்கள் உங்களை தொடக்கூட இல்லை என்று கேட்டனர்.

ஆனால் தாமரையோ, “நான் ஆடை மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் எடுத்தாலும் நான் எப்படி கத்த முடியும்? அந்த நிலைமையில் நான் இருந்தேன்ல?” என்று சொல்லி, “என்னை இப்படியான ஒரு நிலைமைக்கு ஆக்கிவிட்டீர்களே? என்னை விட்டுவிடுங்கள் நான் போகிறேன்” என்று சொன்னதுடன்,  “நீ விளையாண்ட ஆட்டத்தை மக்கள் பார்க்கவே இல்லை. இப்படி கேம் ஆடாத தப்பு அவ்வளவுதான்.. நான் செம்ம கோவத்துல இருக்கேன்.. போய்டு பாப்பா!” என கூறிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சுருதி பாவனியின் உதவியுடன் பாத்ரூம் சென்று தாமரை குளித்துவிட்டு உடைமாற்றும் போது காயினை எடுத்ததாக கூறப்படுவது குறித்து பாவனியிடம் நிரூப் மற்றும் பிரியங்கா பேசும்போது, “நீ எதுக்கு தாமரை ஆடை மாற்றும்போது டவல் கொண்டு மறைத்தாய்? அதுவே மறைவாக உள்ள டிரெஸ்ஸிங் ரூம் தானே? அங்கு கேமரா கூட இல்லையே?” என்று கேட்க, பாவனியோ, தான் இந்த நிலையில் தாமரைக்கு உதவி செய்ததுடன் தவறு.. அவரோ இப்படி பேசுகிறார். நான் சுருதிக்கு உதவ உள்ளே சென்றாலும், தாமரையின் நிலமை தெரியாது. எனவே அவருக்காக தான் டவலை பிடித்திருந்தேன். அந்த கேப்பில் சுருதி காயினை எடுத்துக் கொண்டார்.

நான் தாமரையின் நிலையில் இருந்திருந்தால், ‘அய்யோ இப்படி காயின் விஷயத்தில் கவனக்குறைவாக இருந்துவிட்டோமே’ என நினைத்து அதை காப்பாற்றத்தான் முயற்சித்திருப்பேன் என கூறிவிட்டு மற்றவர்கள் பதில் பேசும் முன் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அதன் பின்னர் தாங்கள் தவறே செய்யவில்லை, ஆனால் தங்கள் பெயர் கெடுகிறது என்று சொல்லி, பாவனி மற்றும் சுருதி அழ, பிரியங்கா மற்றும் மதுமிதா சமாதானப்படுத்தினர்.

தொடர்புடைய இணைப்புகள்

Housemates questions Suruthi Pavani thamarai dressing controversy

People looking for online information on Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Dressing controversy, Housemates, Suruthi Pavani Reddy, Thamarai Selvi, VijayTelevision, Vijaytv will find this news story useful.