ஹிப்ஹாப் தமிழா இசையில் அடுத்த சிங்கிள் பாடல் எப்போ ரிலீஸ் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் வைபவ், பார்வதி நாயர், முனீஸ்காந்த் நடிப்பில் உருவாகி கொண்டிருந்த படம் 'ஆலம்பனா'.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. அந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். இயக்குனர் பாரி கே விஜய் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமி, எடிட்டராக ஷான் லோகேஷ், சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன், கலை இயக்குநராக கோபி ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பரவலாக கவனத்தை பெற்றது, முதல் லுக் போஸ்டர் கமல் நடித்த 'அலாவுதினும் அற்புத விளக்கும்' படத்தினை நினைவு படுத்துவதாக இருந்தது.

ஹிப்ஹாப் தமிழா இசையில் 'எப்போ பார்த்தாலும்' என்கிற முதல் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்மான் மாலிக் இந்த பாடலை பாடியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹிப்ஹாப் தமிழா ஆதி தற்போது 'சிவகுமார் சபதம்' எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த படத்தின் சிங்கிள் ஏற்கனவே வெளிவந்து பெரிய ஹிட் அடித்தது.

தொடர்புடைய இணைப்புகள்

Hiphop tamizha new movie aalambana single release update

People looking for online information on Hip Hop Tamizha Adhi, Vaibhav Reddy will find this news story useful.