நீங்க வெறித்தனமான சினிமா LOVER-ஆ..?! - அப்போ இந்த செம UPDATES கண்டிப்பா உங்களுக்காகதான்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தற்போது முழு வீச்சில் தொடங்கியுள்ளது. 

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கம், இந்தியாவிலும் எதிரொலித்தது. இதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதையடுத்து சினிமா தியேட்டர்கள், மற்றும் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சினிமா ஷூட்டிங்கை தொடங்க அரசு அனுமதியளித்தது. 

இதனிடையே இன்று தமிழ் சினிமா படப்பிடிப்பு உற்சாகமாக தொடங்கியுள்ளது. இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் பத்ரி இயக்கும் திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரசன்னா, ஷாம், அஷ்வின், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த மாயா பஜார் திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது. 

மேலும் பா.விஜய் இயக்கத்தில் ஜீவா அர்ஜுன் நடிக்கும் மேதாவி படத்தின் ஷூட்டிங்கும் இன்று தொடங்கியுள்ளது. மேலும் ஜம்போ சினிமாஸ் தயாரிப்பில் ஆன்ட்ரியா நடித்துள்ள திரைப்படத்தின் ஷூட்டிங்கும் அடுத்த வாரம் சென்னையில் தொடங்கவுள்ளதாம். இத்திரைப்படத்திற்கு நோ என்ட்ரி என பெயரிடப்பட்டுள்ளது. மேகாலாயாவில் படத்தின் 90 சதவீத ஷூட்டிங் முடிந்து இருக்கிறதாம். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மீண்டும் தொடங்கும் ஷூட்டிங் | Here is an super updates of movie shooting in tamil

People looking for online information on Andrea, Jiiva, Sundar C will find this news story useful.