சித்ரா மரணத்தில் உடையும் திடுக்கிடும் உண்மைகள்.. ''ஹேம்நாத் சித்துவை அடித்து, பிராண்டி..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சித்ரா மரணத்தில் பல திடுக்கிடும் உண்மைகளை ஹேம்நாத்தின் நண்பர் ரோகித் உடைத்துள்ளார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி, ஹோட்டல் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து, அவரது கணவர் ஹேம்நாத் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சித்ரா - ஹேம்நாத் உறவு குறித்து ஹேம்நாத்தின் பத்து வருட நண்பரான ரோகித் பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை உடைத்துள்ளார்.

சித்ராவிடம் ஹேம்நாத் பலமுறை சண்டை போட்டிருப்பதாகவும், மேலும் சித்ராவை அடித்தும், கடித்து, பிராண்டியும் ஹேம்நாத் காயப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். 

இதுமட்டுமின்றி ஹேம்நாத்துக்கு பல பெண்களுடன் தொடர்ப்பு இருந்தது. இது அவரின் குடும்பத்தினருக்கே கூட தெரியும். சித்ராவும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல், இனி ஹேம்நாத் தான் தன் வாழ்க்கை என நினைத்தார்.  

அதே நேரத்தில் எப்போதும் சித்ரா மீது ஹேம்நாத் சந்தேகப்பட்டு கொண்டிருந்ததாகவும், அதனால் சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்து பார்க்க யோசிக்கும் அளவுக்கு ஹேம்நாத் சென்றதாக அவர் தெரிவித்தார். 

இதுகுறித்து ஹேம்நாத்தின் நண்பர் ரோகித் பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ. 

 

சித்ரா மரணத்தில் உடையும் திடுக்கிடும் உண்மைகள்.. ''ஹேம்நாத் சித்துவை அடித்து, பிராண்டி..'' வீடியோ

தொடர்புடைய செய்திகள்

சித்ரா மரணத்தில் திடுக்கிடும் உண்மை | hemnath friend rohit reveals shocking details about chithra murder

People looking for online information on Chithra, Hemnath, Pandian Stores Chithra, Syed Rohit will find this news story useful.