அந்த 'வார்த்தையை' அவர் சொல்லவே இல்ல... 'ஆதாரம்' பகிரும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வழக்கம்போல பாலாஜி தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து விட்டார். ஆரி, அனிதா, சனம் உள்ளிட்டோர் நள்ளிரவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த பாலாஜி நல்லவர் போல ஆரியிடம் பேசி நானும் தான் ரியோவை முதுகுல சுமந்தேன் என ஸ்கெட்ச் போட்டார். ஏற்கனவே பட்டும் கூட ஆரி வசமாக மீண்டுமொருமுறை அதில் சிக்கிக்கொண்டார்.

பாலாஜியின் இந்த அன்பான பேச்சு மறுநாள் நாமினேஷன் போது ஆரிக்கு எதிராக திரும்பியது. இதில் ஆரம்பித்த பஞ்சாயத்து பின்னர் இருவரும் நேரடியாக மோதிக்கொள்ளும் அளவுக்கு சென்றது. மொத்த போட்டியாளர்களும் ஆரிக்கு எதிராக திரும்பியும் கூட அவர் அதை எளிதாக சமாளித்து விட்டார். இதையடுத்து இந்தியளவில் ஆரி அர்ஜுனன் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார்.

இந்த நிலையில் ஆரி பேசும்போது நான் விட்டுக்கொடுத்தேன் என்னும் வார்த்தையை பயன்படுத்தவில்லை. போட்டியை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்தேன் என்று பேசியிருக்கிறார். ஆனால் பாலாஜி விட்டுக்கொடுத்தேன் என்ற வார்த்தையை சொல்லி ஆரியை இழுத்து தெருவில் விட்டுவிட்டார். கடைசியில் பாலாஜி மன்னிப்பு கேட்டாலும் கூட வரும் நாட்களில் இந்த பிரச்சினை பெரிதாக வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

'He is not saying' fans extends support for Aari Arjunan

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.