"நான் இந்த கேமரா, கீமரா எல்லாம் பாக்கமாட்டேன்".. விபரீதம் ஆயிடும்.. GP முத்து வார்னிங் 😱

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் ஜிபி முத்து.

Advertising
>
Advertising

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழில் ஆரம்பமான பிக்பாஸ் 6 வது சீசன், அடுத்தடுத்து பல சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களால் சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ட்விஸ்ட், பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டே இருப்பதால், பார்வையாளர்களும் இதனை விறுவிறுப்புடன் கண்டு களித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதன் காரணமாக, பிக்பாஸ் குறித்த கருத்துக்கள் கூட எப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. இதனிடையே, முதல் வார இறுதியில் கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்கள் மத்தியில் உரையாடி இருந்தார். இதில், பல சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறி இருந்தது. தொடர்ந்து, புதிய போட்டியாளராக மைனா நந்தினியும் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அதே போல, பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக டாஸ்க்கில் வெற்றி பெற்ற ஜிபி முத்து தேர்வாகி உள்ளார். அவரை போட்டியாளர்கள் பலரும் கொண்டாடியும் வருகின்றனர். அது மட்டுமில்லாமல், ஜிபி முத்து செய்யும் வேலைகளும் பெரிய அளவில் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

அந்த வகையில், பிக்பாஸிற்கு ஜிபி முத்து விடும் எச்சரிக்கை தொடர்பான சம்பவம் ஒன்று, அதிகம் கவனம் பெற்று வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் தனியாக அமர்ந்து கொண்டு இருந்த ஜிபி முத்து, கேமராவை பார்த்து தனது டிரஸ் இன்னும் வரவில்லை என்றும் ஏதோ ஒரு நாள் கமல் சார் முன்பாக வெள்ளை வேட்டி சட்டையில் நின்று கொண்டிருந்தேன் என்றும் தெரிவிக்கிறார்.

என்னுடைய டிரஸ்ஸை அனுப்புங்கள் என நான்கு நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும் அப்படி அனுப்பவில்லை என்றால் நான் மேலே டி-ஷர்ட் போட்டுக் கொண்டு கீழே கோமணம் கட்டிக் கொள்வேன் என்றும் ஜிபி முத்து குறிப்பிடுகிறார். நான் அரை மணி நேரமாக இங்கு கேமரா முன்பாக சுவரிடம் பேசுவது போல் பேசிக் கொண்டிருக்கிறேன். எனக்கு என் டிரஸ் வரவில்லை என்றால் விபரீதமாகி விடும். நான் இந்த கேமரா கீமரா எல்லாம் பார்க்க மாட்டேன் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.

மறுபக்கம் கோவணம் பற்றி பேசியதும், "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலின் முதல் வரியை பாடிவிட்டு பின்பு இரண்டாவது வரி தெரியவில்லை என கூறிவிட்டு, அப்படியே விட்டு விடுகிறார் ஜிபி முத்து. பிக்பாஸ் வீட்டிற்குள் எத்தனை பிரச்சனைகள் அரங்கேறினாலும் தொடர்ந்து ஜிபி முத்துவின் செயல்கள் அதிக கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Gp muthu warning to biggboss in new episode biggboss6 tamil

People looking for online information on BB6 Tamil, BiggBoss6 Tamil, GP MUTHU will find this news story useful.