"அழவெச்சுட்டு போய்ட்டான்.. ஆண்டவனே இல்ல!" - நண்பரின் இறப்பால் உடைந்து அழும் GP முத்து! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல யூடியூப் எண்டர்டெயினர் ஜி.பி.முத்து தன்னுடைய நண்பன் மறைவை ஒட்டி கதறி அழுத வீடியோ உருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertising
>
Advertising

எப்போதும் தனக்கே உரிய இயல்பால் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஜி.பி.முத்து, தம் நண்பரின் மறைவு குறித்து பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் அழுதுகொண்டே பேசுகிறார். எப்போதும் தம் குடும்பத்தை அடுத்து, எல்லாமே தனக்கு நண்பர்கள் தான் என்று பேசும் ஜி.பி.முத்து, இந்த கொரோனா காலத்தில் தன்னிடம் ஒரு நூறு ரூபாய் கூட இல்லாத சூழ்நிலையில் தன் நண்பன் தான் தனக்கு உதவி செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் புதிதாக கார் வாங்கியபோது யாரை வெளியே அழைத்துச் சென்றார் என்றால் தன் நண்பனை தான் என்று ஏற்கனவே ஜி.பி.முத்து குறிப்பிட்டிருந்தார். அந்த அளவுக்கு நண்பர்கள் மீது அதிக அன்பு வைத்திருக்கும் ஜி.பி.முத்து தற்போது தம்முடைய நண்பர் செந்தில்குமார் என்பவர் இறந்து போனதை பற்றி குறிப்பிட்டு கதறி அழுகிறார். தன் நண்பனை தன்னைவிட்டு ஆண்டவன் பிடித்துவிட்டதாகவும், ஆண்டவன் தன்னை கைவிட்டு விட்டதாகவும் கூறி அந்த வீடியோவில் அழுகிறார்.

அந்த வீடியோவில், “என் உயிர் நண்பன் என்னை விட்டு சென்று விட்டான். என் மீது மிகவும் உயிராக இருப்பான். சத்தியமாக ஆண்டவனே இல்லை! அவன் தெய்வத்துக்கு அவ்வளவு செய்வான். ஆனால் என் நண்பன் என்னை விட்டு போய் விட்டான். என்னை அழ வைத்து விட்டு போய்விட்டான்!” என்று அழுதபடி பேசிய இந்த வீடியோ இணையத்தில் பரவி சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

"அழவெச்சுட்டு போய்ட்டான்.. ஆண்டவனே இல்ல!" - நண்பரின் இறப்பால் உடைந்து அழும் GP முத்து! வீடியோ வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Gp muthu cries after his close friend dies heart broken video

People looking for online information on உடைந்து அழும் GP முத்து, உருக்கமான வீடியோ, ஜிபி முத்து, GP MUTHU will find this news story useful.