பிரபல இயக்குநர் படத்துக்காக சந்தானமும் கவுண்டமணியும் இணைகிறார்களா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சந்தானம் நடிப்பில் 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு ஷபிர் இசையமைக்க, ராம்பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து 'ஏ1' மற்றும் 'டகால்டி' படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் 'டகால்டி' படத்தில் யோகி பாபுவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை 'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை', 'பூமராங்' படங்களின் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்குவதாக கூறப்பட்டது.

எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் சந்தானத்தின் அப்பாவாக ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க, படக்குழு நடிகர் கவுண்டமணியை அணுகியதாக கூறப்படுகிறது. நடிகர் கவுண்டமணி தற்போது சோலோ ஹீரோவாக நடித்துக்கொண்டிருப்பதால் இந்த படத்தில் நடிப்பது பற்றி அவர் விரைவில் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.  இந்த படம் கிராமத்து பின்னணியில் ஒரு முழுமையான நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Goundamani Does not decide to act Santhanam and R Kannan's film

People looking for online information on Goundamani, R Kannan, Santhanam will find this news story useful.