"கோர்ட்டுக்கு வந்துடு பாக்யா!".. பொண்டாட்டிய விவாகரத்து பண்ணும் கோபி?.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மார்ச் 03, 2022 : விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' சீரியலில், மனைவி பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்துவிட்டு கோபி, ராதிகாவுடன் உறவில் இருந்து வருவதுடன் தற்போது ராதிகாவை திருமணம் செய்துகொள்ளும் முடிவையும் எடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

அங்கும் இங்கும் தாவிய நடிகை சமந்தா.. ஜிம் மாஸ்டர் கொடுத்த கஷ்டமான TASK! வைரலாகும் செம வீடியோ

இந்த உண்மை அறிந்த கோபியின் அப்பாவோ கோபப்பட்டு கோபிக்கு ஒரு முடிவு கட்டும் முன், யாரும் எதிர்பாராத விதமாக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சரிவர பேச முடியாமல் இருக்கிறார்.

'அப்பாவி' பாக்கியலட்சுமி

ஒரு பக்கம் ராதிகாவை திருமணம் செய்யும் முடிவை தீவிரப்படுத்தச் சொல்லி ராதிகா கூறிவர, கோபி இப்போது தான் தடுமாறுகிறார். எனினும் பாக்கியலட்சுமியிடம் வக்கீல் நோட்டீஸில் கையெழுத்தும் வாங்கிவிட்டார் கோபி. ஆனால், அது விவாகரத்து பத்திரம் என்பதே தெரியாமல், கோபியின் மனைவியான அப்பாவி பாக்கியலட்சுமி கையெழுத்தும் போட்டுவிட்டார்.

கோர்ட்டுக்கு போணும்

இதனைத் தொடர்ந்து, பாக்கியலட்சுமியை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் விஷயத்தை, சற்று தடுமாற்றத்துடன் சொல்ல முயற்சி செய்கிறார் கோபி. இது பற்றி பாக்கியலட்சுமியிடம், "நாளைக்கி 10 மணிக்கு கோர்ட்ல இருக்கணும். இங்க இருந்து 9 மணிக்கு கெளம்புனா தான் அங்க நேரத்துக்கு போய் சேர முடியும்" என கோபி கூற, எதுவும் தெரியாத பாக்கிய லட்சுமி, வெள்ளந்தியாக தலையாட்டிக் கொள்கிறார்.

தடுமாற்றத்தில் கோபி

தொடர்ந்து, தான் ஏதாவது அங்கு வந்து பேச வேண்டுமா என எதுவும் தெரியாமல் பாக்கியலட்சுமி கேட்க, மனைவியை எதிர்கொள்ள முடியாமல், தரையில் பார்த்துக் கொண்டே பேசுகிறார் கோபி. பத்து நிமிடம் உன்னை பற்றி பேச வேண்டியிருக்கும் என கோபி கூற, நான் ஏன் என்னை பற்றி பேச வேண்டுமென பாக்கியலட்சுமி அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்புகிறார்.

நான் ரெடி ஆயிடுறேன்

இதற்கு சற்று விரக்தியியுடன் பதில் சொன்ன கோபி, "நீ எதுவும் பேச வேண்டாம். என்னுடன் வந்தால் மட்டும் போதும். பேரு பாக்கியலட்சுமியான்னு கேட்டா ஆமான்னு மட்டும் தலையாட்டுனா போதும்" என கோபி கூற, "இவ்வளவு தானா, நாளைக்கு 9 மணிக்கு நான் ரெடி ஆயிடுறேன்" எனக்கூறி விட்டு, பாக்கியலட்சுமி கடந்து செல்கிறார்.

மனதில் ஓடும் கேள்விகள்

தனது மனைவிக்கு செய்யப் போகும் காரியத்தை எண்ணி, விரக்தியுடன் இருக்கும் கோபிக்கு, இன்னொரு பக்கம், ராதிகாவின் வார்த்தைகளும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. உண்மை தெரிந்தால், மனைவி பாக்கியலட்சுமி அதனை எப்படி எடுத்துக் கொள்வார் என்ற கேள்வியும் கோபியின் மனதில் ஓடுவதாகவே தெரிகிறது.

பாக்கியலட்சுமியின் மாங்கல்ய பாக்கியம் அவரை காக்குமா என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் விறுவிறுப்பாகவும், புதிய திருப்பங்களுடனும் காண முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அரபிக் குத்து பாடலுக்கு ஆடி அசத்திய கல்லூரி மாணவர்கள்… செம்ம மாஸ் flash mob!

தொடர்புடைய இணைப்புகள்

Gopi ready to divorce and call baakiyalakshmi to court

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi Episode, Baakiyalakshmi serial, Divorce, Gobi will find this news story useful.