எந்தா கோபி, இனிமே நொந்த கோபி.. ராதிகா வைத்த 'செக்'.. இதுக்கு மேலயும் அவர யாரு காப்பாத்துறது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சீரியல்களை பொறுத்தவரையில், 'பாக்கியலட்சுமி' தொடரில் வரும் கோபி, எப்போது தன்னுடைய மனைவி பாக்கியா மற்றும் ராதிகாவிடம் வசமாக சிக்கப் போகிறார் என்பதில் தான் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் உள்ளது.

Advertising
>
Advertising

தொழிலதிபர் மனைவியுடன் உறவு, இப்ப "ரகசிய கர்ப்பம்".. கங்கனா நிகழ்ச்சி சர்ச்சைகள்

பாக்கியாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் கோபிக்கு, கடந்த பல காலமாகவே ராதிகா மீது காதல் தோன்றியுள்ளது.

ராதிகாவும் கோபி மீது அதிக நம்பிக்கை கொண்டு, அவர் மீது அன்புடன் பழகி வருகிறார். அது மட்டுமில்லாமல், பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ்வதற்கான வழிகளிலும் கோபி ஈடுபட்டு வருகிறார்.

கோபியின் மாஸ்டர் 'மூவ்'

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் ராதிகா மற்றும் பாக்கியா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் ஆவார். ஆனால், பாக்கியாவின் கணவர் தான் கோபி என்பது ராதிகாவுக்கோ, ராதிகாவை திருமணம் செய்ய போவது தனது கணவர் கோபி தான் என்பது பாக்கியாவுக்கோ தெரியாது. அப்படி இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகிறார் கோபி.

பாக்கியாவுக்கு கோபி கொடுத்த வேலை

ஆனாலும், தன்னுடைய தந்தைக்கும், மகன் எழிலுக்கும் கோபியின் போக்கு பற்றி தெரிய வருகிறது. இருந்தாலும் கோபி தொடர்ந்து சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார். அப்படி ஒரு நிலையில் தான் தற்போது மீண்டும் பாக்கியாவிடம் கோபி சிக்கப் போவதற்கான காட்சிகள் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ராதிகாவின் மகளான மயூராவின் பிறந்தநாளை முன்னிட்டு, குழந்தைகள் இல்லம் ஒன்றில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், உணவு தயார் செய்து வழங்கும் பொறுப்பினை, பாக்கியாவிடம் ஒப்படைத்திருந்தார் ராதிகா.

இதனிடையே, கோபியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்பதால், பாக்கியாவும் அங்கு வரவிருப்பதை அறிந்த அவர், தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வேலையை பாக்கியாவிடம் கொடுத்து விடுகிறார். முன்னதாக, பாக்கியா தன்னை கண்டு விடுவாள் என்ற பயத்தில் இருந்த கோபி, சமயோஜிதமாக செயல்பட்டார்.

அதே போல, பலமுறை பாக்கியா என்றாலே பார்க்காமல் தப்பித்துக் கொண்டிருந்த கோபியை ராதிகாவும் கிண்டலாக குறிப்பிட்டு வந்தார். ஆனால், பாக்கியாவை திசை திருப்பி விட்ட காரணத்தினால், பாக்கியா டீச்சரை இன்று பார்க்க தயாராக இருக்கிறேன் என கோபி, ராதிகாவிடம் கூறினார். குழந்தைகள் இல்லத்துக்கு பாக்கியாவும் வராமல் போகவே, தப்பித்துக் கொண்டார் கோபி.

இதுக்கு மேலயும் கோபி தப்பிப்பாரா?

அப்படி ஒரு சூழ்நிலையில், புது குண்டு ஒன்றை ராதிகா தூக்கி போட அதிர்ந்து போகிறார் கோபி. காரில் இருவரும் சென்று கொண்டிருக்க, மகளை அழைத்துக் கொண்டு ஒரு இடத்திற்கு போகலாம் என ராதிகா கூறுகிறார். தியேட்டர், ரெஸ்டாரண்ட், மால் என கோபி சொல்ல, அனைத்தையும் மறுக்கிறார் ராதிகா. பாக்கியா டீச்சர் வீட்டுக்கு என ராதிகா மறுகணம் சொன்னதும், சட்டென ஷாக் மோடில் காரை பிரேக் அடித்து நடு ரோட்டில் நிறுத்துகிறார் கோபி.

பின்னர் சுதாரித்துக் கொண்ட கோபி, யாருமே இல்லாத சாலையை பார்த்து குறுக்கே யாரோ வந்ததாக, ராதிகாவிடம் பொய் கூறுகிறார். நடுவே, "என் வாழ்க்கை'ல அவன் அவன் குறுக்க வந்தா என்ன பண்றது?" என நிஜ கருத்தையும் உளறிக் கொட்டுகிறார். நேரம் சரியில்லை இன்னொரு நாள் பாக்கியா டீச்சர் வீட்டுக்கு போலாம் என ஏதேதோ காரணங்களை கோபி சொல்லி பார்க்க, அவை எவற்றுக்கும் ராதிகா செவி சாய்க்கவில்லை.

இன்று எப்படியும் கோபி மாட்டி விடுவார் என்ற சூழ்நிலையில், இனி என்ன சூழ்ச்சிகள் செய்து அவர் தப்பிப்பார் என்பது தான் உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக உள்ளது.

அட.. ARR பகிர்ந்த ‘தமிழணங்கு’ ஓவியத்தை வரைஞ்சது இவரா? – ஆச்சரிய தகவல்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Gopi reaction after radhika plan to visit baakiya home

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Gopi, Radhika, Vijay Television will find this news story useful.