"ஒரு ஸ்டைலான அம்மாவ கல்யாணம் பண்ணட்டுமா??.." கோபிக்கு 'மகள்' சொன்ன பதில்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோபி, பாக்கியா மற்றும் ராதிகா ஆகியோரின் நிலை என்ன என்பது தான், தற்போது 'பாக்கியலட்சுமி' சீரியலின் ஹாட் டாபிக்.

Advertising
>
Advertising

இந்தா வாங்கிக்கோ”… கலாய்த்த பிரேம்ஜிக்கு வெங்கட்பிரபுவின் செம்ம ரிப்ளே- viral tweets

மனைவி பாக்கியா மற்றும் குடும்பத்தினரை விட்டு விட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ, நூறு சதவீதம் முடிவு எடுத்து விட்டார் கோபி.

இதற்காக, பாக்கியா மற்றும் ராதிகா என இருவரிடமும் மாறி மாறி நாடகம் நடத்தி வருகிறார் அவர்.

அப்பாவை வெறுக்கும் எழில்?

கோபியின் மனைவி தான் பாக்கியா என்பதை அறியாத ராதிகா, திருமணத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளார். அதே போல, கணவரின் போக்கு குறித்து, பாக்கியாவுக்கும் சந்தேகம் வர ஆரம்பித்துள்ளது. இதனிடையே, தீம் பார்க் ஒன்றில் வைத்து, வேறொரு பெண்ணுடன், தந்தை கோபி காரில் ஏறி போவதை பார்த்த எழில், அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

முடிவு கட்டத் துடிக்கும் தந்தை

தொடர்ந்து, தந்தையிடம் இது பற்றி கேட்டு, எச்சரிக்கவும் செய்கிறார் எழில். இதனையடுத்து, தாத்தாவிடம் அழுது கொண்டே பேசும் எழில், அப்பா இன்னொரு பெண்ணுடன் சுற்றுவதை சொல்லி, அவர் இனிமேல் வேண்டாம் என தோன்றுவதாகவும் வேதனையில் தெரிவித்தார். கோபி மற்றும் ராதிகா விவகாரம் பற்றி ஏற்கனவே தெரிந்த கோபியின் தந்தை, மகனின் போக்குக்கு முடிவு கட்ட வேண்டி கோபி மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிடம் காட்டி விட அதனை எடுத்துக் கொண்டு ராதிகா வீட்டிற்கு கிளம்புகிறார்.

அப்போது, பாதி வழியிலேயே நடக்க முடியாமல் கோபியின் தந்தை மயங்கி விழ, ராதிகாவிடம் சிக்காமல் தப்பித்தார் கோபி. இனிவரும் நாட்களில், கோபி - ராதிகா திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில், அதற்கு முன் எப்படியாவது கோபி சிக்குவாரா என்றும் ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

ஸ்டைலான அம்மா..

இந்நிலையில், மகள் இனியாவுடன் இணைந்து ஒரு காட்சியில் உரையாடுகிறார் கோபி. அப்போது சற்று மறைமுகமாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதை பற்றி கோபி பேச முற்படுகிறார். "எனக்கும் ஸ்டைலான ஒரு அம்மா இருந்து இருக்கலாம்" என இனியா ஏங்க, இதனைக் கேட்ட கோபி, உடனடியாக, "டாடி வேணும்னா வேறொரு ஸ்டைலான மம்மியை கல்யாணம் பண்ணிக்கட்டுமா?" என கேட்கிறார்.

உங்க அம்மா பாவம்

இதனைக் கேட்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்த இனியா, மறுகணமே சிரித்தபடி, "இது சூப்பரா இருக்கே. பண்ணிக்கோங்க" என கூறுகிறார். பிறகு, உங்களுக்கு அம்மாவை பிடிக்காது தானே என இனியா கேட்கிறார். இதற்கு பதில் சொன்ன கோபி, "உங்க அம்மா ரொம்ப பாவம். அவளுக்கு ஒண்ணும் தெரியாது. அவளை பிடிக்காதுன்னு எல்லாம் இல்ல" எனக்கூறிக் கொண்டே, தன்னுடைய முடிவுக்கு மகள் ஆதரவாக இருப்பாளா என்பதை அறிய மற்றொரு கேள்வியை முன் வைக்கிறார் கோபி.

ஒரு வேளை நாங்க பிரிஞ்சுட்டா..

"ஒரு வேளை நானும், உன் அம்மாவும் பிரிஞ்சிட்டா நீ யார் பக்கம் இருப்பே?" என கோபி சொன்னதும், தந்தை ஏன் இப்படி எல்லாம் கேட்கிறார் என்பது போல இனியா யோசித்துக் கொண்டிருக்கிறார். பின்பு சுதாரித்துக் கொண்ட கோபி, விளையாட்டாக கேட்டதாகவும், ஒரு வேளை அப்படி நடந்தால் நீ யார் பக்கம் இருப்பாய் என கேட்க, "இதுல என்ன டாடி டவுட்டு, நான் உங்க பக்கம் தான்" என இனியா சொன்னதும், லைட்டாக சிரிக்கிறார் கோபி.

BBUltimate : ”மூஞ்ச ஒடச்சிபுடுவேன்”… அபிராமியிடம் எகிறிய தாமரை – biggboss எடுத்த முடிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Gopi about second marriage to daughter iniya

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Baakiyalakshmi serial promo, Vijay Television will find this news story useful.