ஆஜீத்துக்கு 'அவங்க' ரெண்டு பேரு செஞ்சது... கொஞ்சம் கூட நியாயமில்ல!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று கோழி-நரி டாஸ்க் ஆஜீத்தையே கோபப்பட வைத்து விட்டது. பாலாஜியின் முட்டை உடைந்ததை அடுத்து ஆஜீத் கோழியாக மாறினார். அப்போது ஆஜீத், பாலாஜியிடம் டீல் பேசினார். அதில் நீங்க என் முட்டையை தொட்ருங்க பணத்தை ஆளுக்கு பாதியா பிரிச்சுக்கலாம் என கூறினார். இதற்கு பாலாஜியும் சம்மதம் சொன்னார். ஆனால் அவர்களின் திட்டம் முழுதாக நடக்கவில்லை.

ஒரு நேரத்தில் ஒரு நரி மட்டும்தான் அட்டாக் செய்ய வேண்டும் என்ற விதியை மீண்டும் ஒருமுறை போட்டியாளர்கள் மீறினர். முன்னால் ரம்யா அட்டாக் செய்ய வர, பின்னால் அமைதியாக இருந்த கேப்ரியலா சட்டென முட்டையை தொட்டு ஆட்டத்தை முடித்து விட்டார். இதைப்பார்த்த ஆஜீத் பயங்கரமாக கோபப்பட்டார். கேப்ரியலா இப்படி செய்ததை ஆஜீத்தால் ஏற்க முடியவில்லை.

அப்போ முட்டை மேலேயே படுத்துக்கணுமா? என்ன நடக்குது இங்க? இதெல்லாம் அநியாயம் என கத்தினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரம்யா, கேப்ரியலா ரெண்டு பேரும் ஒரே நேரத்துல இப்படி செஞ்சது நியாயம் இல்ல என கருத்து தெரிவித்து வருகின்றனர். வேறு சிலரோ கேபி இந்த போட்டியை தனியாக ஆடுகிறார். அவர் செய்ததில் தவறேதும் இல்லை என அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Gabriella steals Aajeedh's Egg in Task, Netizens Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.