சுஷாந்த் சிங் வழக்கில் சிக்கும் 4 பெரும் புள்ளிகள்.. 'ஹீரோ., டைரக்டர் மற்றும் 2 அரசியல்வாதிகள்'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுஷாந்த் சிங் வழக்கில், நான்கு பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிபடுவதாக தகவல் தெரிய வந்துள்ளது. 

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியாவுக்கு அவரது தற்கொலை தொடர்பிருப்பதாக பரபரப்பு திருப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இதில் 4 பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிபடுவதாக தெரிய வந்துள்ளது. இந்த 4 பேரில் ஒரு பிரபல ஹீரோ, ஒரு டைரக்டர் மற்றும் இரண்டு அரசியல்வாதிகளின் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க,, சுஷாந்தின் காதலி ரியா, சுஷாந்திற்கு போதை மருந்துகள் எடுத்து கொள்ளும் பழக்கம் இருந்ததாகவும், அதை விடும்படி அவர் சொல்லியதாகவும் கூறியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சுஷாந்த் சிங் வழக்கில் சிக்கும் 4 பெரும் புள்ளிகள்.. 'ஹீரோ., டைரக்டர் மற்றும் 2 அரசியல்வாதிகள்' வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

சுஷாந்த் சிங் வழக்கில் பரபரப்பு | four big shots were suspicious in sushant singh death

People looking for online information on Rhea Chakraborty, Sushant Singh Rajput, Sushanth Singh Death will find this news story useful.