பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த மதுமிதா - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர் மதுமிதா தன்னைத் தானே துன்புறுத்திக்கொண்டதாக அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து அவர் வெளியேற்றப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. மேலும் பிரபல தொலைக்காட்சி அவர் மீது வழக்குப்பதிவு செய்ததாக செய்திகள் வெளிான வண்ணம் இருந்தன.

இந்நிலையில் நடிகை மதுமிதா பிக்பாஸ் நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னை போட்டியாளர்கள் துன்புறுத்தியதாகவும் அதனை நிகழ்ச்சிதாரர்களும் தொகுப்பாளரும் கண்டிக்கவில்லை என்றும் அந்த புகாரில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தன் மீது நிறைய கட்டுப்பாடுகள் விதித்ததாகவும், தன்னை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி விட்டதாகவும் அந்த புகாரில் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Former Bigg Boss Contestant Madhumitha Complaints against Bigg Boss 3

People looking for online information on Bigg Boss 3, Kamal Haasan, Madhumitha will find this news story useful.