ஒரு வழியாக "போதைப்பொருள்" வழக்கில் ஜாமினில் விடுதலையாகும் ஷாருக்கானின் மகன்! முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த அக்டோபர் 3-ம் தேதி, சட்ட விரோதமாக போதைப் பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் NCB அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்ட இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வ்ருகிறது.

Advertising
>
Advertising

இந்த வழக்கில், ஆர்யன் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் முன்னர் தள்ளுபடி செய்து இருந்தது. சிறப்பு கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீனுக்காக ஷாருக்கான் குடும்பம் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் ஆர்யனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி இன்று உத்தரவிட்டார். மேலும் முழு தீர்ப்பும் வரும் வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

வரும் வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து ஜாமினில் விடுதலை செய்யப்டுகிறார் ஆர்யன் கான். கோர்ட் விதித்த நிபந்தனைகளை ஆர்யன் கான் மீறும் பட்சத்தில் NCB போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், ஆர்யனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

ஆர்யன் கானுக்கு வரும் நவம்பர் 2-ம் தேதி பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வழியாக "போதைப்பொருள்" வழக்கில் ஜாமினில் விடுதலையாகும் ஷாருக்கானின் மகன்! முழு தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

FINALLY - AFTER MORE THAN 3 WEEKS IN JAIL ARYAN KHAN GETS RELIEF

People looking for online information on Aryan Khan, Shahrukh Khan will find this news story useful.